Thursday, September 21, 2017

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன்.

குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்;
"யாரையும் எளிதில் ஏற்காத கர்நாடக இசை உலகில் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

வலையப்பட்டி சுப்பிமரமணியத்தின் தவிலுடன் வயலின் கச்சேரிகள்.

வயலினில் திரை இசை. உரையாடல் போன்றவை 

திரை இசை அமைப்பு"என்றுதான் வரையறுக்க வேண்டும்.

திரையிசையில் இவர் இசை அமைத்த காதல் பாடல்களை விட பக்தி பாடல்களே பிரபலம். பக்தி பாடல்கள் பாமரரையும் சென்றடையும் அளவிற்கு இவரது இசை அமைந்தது.

குன்னக்குடி வைத்யநாதனின் தந்தையார் பெயர் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள். தாயார் - மீனாக்ஷி அம்மாள். தந்தையார் ஹரிகதா காலக்ஷேபம் செய்பவர். "சங்கீத சாகித்ய ஹரிகதா பிரவீன் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள்" என்று அழைக்கப்பட்டார். குன்னக்குடியின் சகோதரர் கணபதி சுப்பிரமணியம் மிருதங்கம் வாசிப்பவர். தமக்கைகள் சுப்புலக்ஷ்மி-சுந்தரலக்ஷ்மி, குன்னக்குடி சகோதரிகள் என்ற பெயரில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் செய்து வந்தனர். குன்னக்குடி வைத்தியநாதன் பள்ளி ஏதும் செல்லாமல் அதிகாலையில் நீராடி சந்தியாவந்தனம் முடித்து தந்தையின் பூஜைக்கு தேவையான புஷ்பங்கள் கொணர்ந்து தந்து விட்டு. குன்றின் மேல் காட்சி தரும் ஷண்முகநாதனின் சந்நிதிலேயே பழியை இருப்பார். அங்கு கிடைக்கும் அரை பட்டை சாதம், அரை வடை, அரையணா இவற்றை கொண்டு வந்து தாயிடம் கொடுப்பதுதான் அவரது அன்றாட பணி. இதில் அவரது தாய்க்கு சற்று கவலையே. தன கணவரிடம் இவரை எப்படியாவது கரை தேற்றி விடுங்கள் என்று சொல்லுவார்;

குன்னக்குடி சகோதரிகளின் ஒரு கச்சேரிக்கு வயலின் பக்க வாத்தியம் வாசித்து வந்த திருப்பத்தூர் ராமச்சந்திரச்சார் என்பவர் வரவில்லை. வயலின் இல்லாமலேயே கச்சேரி முடிந்தது. மறுநாள் வந்த அவரை குன்னக்குடியின் தந்தை இப்படி கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டீரே என்று கேட்டதற்கு. வரமுடியாமல் போச்சு என்று அலட்சியமாக கூறியதுடன், "பொண்ணுங்களை பாட வெச்சுட்டே, பையன் மிருதங்கம், ஆனா வயலினுக்கு என்னைத்தானே எதிர்பார்த்திருக்கே" என்று கேலியாகக் கூறினார். இந்த கேலி பொறுக்காமல் அப்போது அங்கு வந்த சிறுவன் வைத்தியின் கையைப் பிடித்து "இவனைப் பெரிய வயலின் விதவானாக்குகிறேன் என்று சவால் விட்டார். அனைவரும் சிரித்து விட்டனர். 

அவரிடமிருந்து வயலினை குன்னக்குடி வாங்கிய நேரம் அவரது வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். அசுர சாதகம் செய்து ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது சகோதரிகளின் கச்சேரியில் தனது சகோதரன் மிருதங்கம் வாசிக்க இவரது வயலின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் பதினோரு வயதிலேயே, காரைக்குடி கிருஷ்ணன் கோயிலில், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஓரிரு ஆண்டிலேயே, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் போன்ற பல முன்னணி விதவான்களுக்கு குன்னக்குடி அவர்கள் வயலின் வாசித்திருக்கிறார்.

இவ்வாறு மேடைகளில் பல வித்வான்களுக்கு பக்க வாத்தியம் வாசித்து வந்த குன்னக்குடியின் கவனம் சினிமா இசையின் மீது திரும்பியது. ஜலதரங்கம் வெங்கட்ராம ராவ் என்பவற்றின் சிபாரிசில் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ராமநாத அய்யர், எஸ் எம் சுப்பையா நாயுடு போன்ற இசை மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள, 1952ல் சென்னை வந்தார் குன்னக்குடி. திரை இசைக் கலைஞராகவும், சூலமங்கலம் சகோதரிகள் போன்றோருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவராகவும் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்த அவர், 1960லிருந்து தனிக் கச்சேரிகள் வழங்கத் தொடங்கினார்.

அப்போது ஹெச் எம் வி நிருவனத்தில் பக்திப் பாடல் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. ஏ வி எம்மின் கொலம்பியா நிறுவனத்திற்கும் நூற்றுக்கான பக்திப் பாடல்கள் இசைமைத்து, அவை தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றுதான் "திருப்பங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" என்ற சூலமங்கலம் சகோதரிகளின் புகழ் பெற்ற பாடல்.

இப்பாடலை தனது கந்தன் கருணையில் சேர்த்துக் கொள்ள விரும்பினார் திரு ஏ பி நாகராஜன். திரு மகாதேவன் அவர்கள் இதற்கு சம்மதிப்பாரா என்ற குன்னக்குடியின் ஐயத்திற்கு "மகாதேவனிடம் நாங்கள் சொல்லிவிட்டோம், இதற்கு நீங்கள் சம்மதித்தால் வளர்ந்து வரும் ஒரு கலைஞருக்கு நீங்கள் வழி காட்டியது போல் இருக்கும் என்றோம். அவரும் சம்மதித்து விட்டார்" என்று கூறினார் ஏ பி என். அப்படத்தில் இந்தப் பாடல் மட்டும்தான் இடம் பெற்றது, குன்னக்குடியின் பெயர் இடம் பெறவில்லை.

ஆனாலும் குன்னக்குடி மனம் தளரவில்லை. மீண்டும் இயக்குனர் ஏ பி என், குன்னக்குடியை அழைத்து, தனது வா ராஜா வா படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை அளித்தார். டி எம் எஸ், பி சுசீலா, கண்ணதாசன், வாலி என்ற ஜாம்பவான்கள் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. படத்தின் பட்ஜெட் அப்படி. இப்படத்திற்கு குன்னக்குடி 5 பாடல்கள் போட்டார். ஐந்துமே சூப்பர் ஹிட்.

முதல் பாடலாக ஆபேரி ராகத்தில் "இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகின்றான்" என்ற பாடகி. பூவை செங்குட்டுவனின் வரிகளுக்கு, சீர்காழியின் குரலில் பாடலைக் கேட்கும்போதே மனம் இசையில் லயித்துப் போகின்றது. அடுத்து மஹாபலிபுரத்தின் சிற்பக்க கலையை விளக்கும், "கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா" சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிக் கேட்ட பாடல் இது.

அடுத்து இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ பின் எடுத்த படம் "திருமலைத் தென்குமரி".. இதில் "மதுரை அரசாளும் மீனாக்ஷி" பாடலில் காபி ராகத்தின் சொரூபத்தைக் காட்டி, கானடா, பீம்பிளாஸ், கல்யாணி, குந்தளவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் இது  "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" பாடலில் சுப்ரபாதத்தை இணைத்து ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தி விட்டார் என்றால் அது மிகையாகாது. ஜனரஞ்சகமாக பல மொழிப்பாடல் ஒன்றும் உண்டு. அதுவும் எல்லோராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

அடுத்து ஜி என் வேலுமணி தயாரித்து இயக்கிய "நம்ம வீட்டு தெய்வம்". கே ஆர் விஜயா முதல் முதலில் தெய்வ வேடம் ஏற்ற படம். இதில் தமிழ் அறிஞர் திரு கி வா ஜெகந்நாதனை பாடல் எழுத அணுகினார். குன்னக்குடி. இசை அமைப்பாளர்கள் போடும் ச(ந்)த்தத்திற்கெல்லாம் பாட்டெழுத முடியாது என்றார் கி வா ஜெ முதலில். பின்பு குன்னக்குடியின் வற்புறுத்தலின் பேரில் எழுத வந்தவர், மெட்டு என்ன என்று வினவினார். உங்கள் தமிழ் தங்கு தடையில்லாமல் அருவி போல் பெருக்கெடுத்து வர வேண்டுமென்பதால் நீங்கள் எழுதும் சந்ததிற்கு நான் மெட்டமைக்கிறேன் என்றார் குன்னக்குடி. எங்கே இந்த வரிக்கு ஒரு மெட்டுப் போடுங்கள் பார்க்கலாம் என்று "உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி" என்ற வரிக்கு குன்னக்குடியின் வயலின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த திரு கி வா ஜெ, இரண்டாவது வரியிலிருந்து நீங்கள் போடும் மெட்டுக்கே பாடல் எழுதுகிறேன் என்றார். இரண்டாவது வரியிலிருந்து திஸ்ர நடையை சதுஸ்ரமாக்கி கொடுக்க அதற்கும் "உன்னை நம்பி வந்தோமம்மா வா என்று எழுதினார். டி எம் எஸ், பி சுசீலா இருவரது குரல்களில் இப்பாடல் பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. பின்னர் அன்னை அபிராமி என்ற படத்திலும், "இல்லை என்பான் யாரடா", "மாகாளி, மகமாயி, சாமுண்டி" என்று இரண்டு பாடல்களை திரு கி வா ஜெ எழுதினார்.
Image may contain: 1 person

அடுத்து ஏ பி என் இயக்கிய கண்காட்சியில் அவரது விருப்பத்திற்கேற்ப பீம்பிளாஸ் இராகத்தில் புதுமையாக ஒரு டூயட் கேட்டார் ஏ பி என். சற்று யோசித்த குன்னக்குடி, இது வரையில் ஏழு அட்சரங்கள் கொண்ட மிஸ்ர நடையில் எவரும் அமைத்திராத காதல் டூயட் ஒன்று அமைத்தார். "தனன்ன தன்னன தன்ன என்று தொடங்கி குன்னக்குடி சொன்ன தத்தகாரத்தை, கவிஞர் கே டி சந்தானம் 
"அனங்கன் அங்கஜன் அன்பன் 
வசந்தன் மன்மதன் என்றும் 
வணங்கும் என் உயிர் மன்னவா" என்று எழுதினர்.

அடுத்து சீர்காழி பிரதான பாத்திரத்தில் நடித்த அகத்தியர். இதில் சீர்காழியும், நாரதராக வந்த டி ஆர் மகாலிங்கமும் இணைந்து பாடும் "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்ற பாடலைக் கேட்ட திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள், "கரஹரப்பிரியாவின் அனைத்து சஞ்சாரங்களையும் ஒரே பாடலில் திரட்டித் தந்து விட்டீர்களே" என்று பாராட்டினார்.

இதே படத்தில் நடந்தாய் வாழி காவிரி, மலை நின்ற திருக்குமரா மால் மருகா, வென்றிடுவேன், நாட்டையும் நாததால் வென்றிடுவேன்" என்று வரிக்கு வரி ராகம் மாறி வரும் ராகமாலிகையாக டி எம் எஸ்-சீர்காழி பாடும் போட்டிப் பாடல் என்று ஒரு இசை விருந்தையே படைத்து விட்டார். சிறுவர்களுக்காக தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற பாடல் வேறு.

இவரது பெரிய வெற்றிபப் படம் என்று சொன்னால் "தேவரின் தெய்வம்" தான். இதில் கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்த கலைஞர்களையும், பக்திப் பாடல்கலில் புகழ் பெற்றவர்களையும் பாட வைக்க விரும்பினார் குன்னக்குடி. மதுரை சோமு ஏற்கெனவே திரைக்குப் பொருத்தம் இல்லை என்று நிராகரிக்கப் பட்டவர், பாடுவதற்கு தயங்கிய அவரை பலவாறு எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்து "மருத மலை மாமணியே" பாடலை பாட வைத்தார். பெரும் புகழ் அடைந்த பாடலாயிற்று அது. ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிய "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய" நாடறியும் நூறு மலை", பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" டி எம் எஸ்-சீர்காழி இணைந்து பாடிய "திருச்செந்தூரின் கடலோரத்தில்" ஆகிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன.
பிறகு ராஜ ராஜ சோழன், குமாஸ்தாவின் மகள் என்று சில தோல்விப் பாடல்கள். ஆயினும் இவரது இசை அதில் சோடை போகவில்லை. அடுத்து சிவாஜி கணேசனின் மனிதனும் தெய்வமாகலாம் - இதில் வாதாபி கணபதிம் பஜே வை மெல்லிசையாக்கி இவர் போட்ட காதல் டூயட் தான், பால் பொங்கும் பருவம். கவியரசரையும் நடிகர் திலகத்தையும் அசர வாய்த்த மெட்டு அது.
அதன் பின் தேவரின் திருவருள், மேல் நாட்டு மருமகள் போன்ற படங்களில் இவரது பாடல்கள் வெற்றி பெற்றன.

பிறகு இவர் தயாரிப்பில் உருவான கந்தரலங்காரம், சேலம் ராமச்சந்திரனின் தயாரிப்பில் ராக பந்தங்கள் என்று இவர் இசையமைப்பு தொடர்ந்தது, இதில் ராக பந்தங்கள் படத்தில் வாணி ஜெயராம் குரலில் "சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் என்ற பாடல் சொல்லும்படி அமைந்திருந்தது.

அடுத்து மீண்டும் இவரது தயாரிப்பில் "தோடி ராகம்" டி என் சேஷகோபாலன் கதாநாயகன், இதில் தோடியில் பாடுகின்றேன் என்று தோடி ராகத்தில் அமைந்த பாடல் பிரசித்தம். குன்னக்குடியின் குரலில் "கொட்டாம்பட்டி ரோட்டிலே" என்று ஒரு நாட்டுப்புறப்(!) பாடல். இதற்குப் பிறகு குன்னக்குடி இரு படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டும் நிறைவேறவில்லை. அதன் பின்னர் அவர் திரைத்துறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 

திரையிசையில் பக்திப் பாடல்களில் பெருமளவு வெற்றி பெற்றவர் என்ற பெருமை இவருக்கு எப்போதும் உண்டு.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

டி சலபதிராவ்

தமிழ்த் திரையிசையின் பிதாமகர்கள் - 15 - டி சலபதிராவ் 

விஜயவாடா அருகே உள்ள கபிலேஸ்வரம் கிராமத்தில் டிசம்பர் 20, 1920 அன்று சலபதிராவ் பிறந்தார்.அவர் பிறந்த கிராமத்தில் பொதுவுடமை இயக்கம் (கம்யூனிசம் பரவியிருந்தது அவரது தமக்கைகளில் ஒருவர் கம்யூனிஸத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். இன்னொரு சகோதரிக்கு சங்கீதம் கற்பிக்கப் பட்டு வந்தது. அதில் சலபதிராவ் ஈடுபாடு கொண்டார். 

பொறியியல் படிப்புக்காக பம்பாய் சென்றவர் அங்கு இசை பயின்றார். யாரிடம் என்ற விவரங்கள் இல்லை. ஊர் திரும்பியதும் கம்யூனிச இயக்கத்தில் கலந்து கொண்டார். அதன் விளைவாக 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையிலும் பலரை பாட சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அவர் திரையுலகில் நுழைந்தது 1951 ஆம் ஆண்டு. ஆனால் நேரடியாகத் தமிழ் திரைப்படங்களில் இசையமைக்கத் துவங்கியது 1956ல் அமரதீபம் திரைப்படம் மூலம். இப்படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். சலபதிராவுக்கு பின்னணி இசைதான் தரப்பட்டது. மற்ற இருவரும் ஆளுக்கு இரண்டு பாடல்கள் இசையமைத்து ஒதுங்கி விட்டார்கள். ஆகையால் மீதமுள்ள பாடல்களுக்கு சலபதிராவே இசையமைத்தார். 

"எங்கே மறைந்தனையோ" என்ற ஒரு பாடல், எம் எல் வசந்தகுமாரி பாடியது. இதற்கு ஜி என் பாலசுப்ரமணியம் இசையமைத்திருந்தார். இன்னொரு பாடல் "நாடோடிக் கூட்டம் நாங்க தில்லேலேலோ" என்று நரிக்குறிவார்கள் பாடுவது. ஏ பி கோமளா, டி வி ரத்னம். டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடியது. ஜி ராமநாதன் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படத்தில் சாகாவரம் பெற்றதென்னவோ சலபதிராவின் பாடல்கள்தான்.

மனித குலத்துக்கு அவசியமான குணத்தைப் பற்றி ஒரு பாடல் "நாணயம் மனுஷனுக்கு அவசியம், மிகவும் அவசியம்" - கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியது. இதில் நாணயம் என்பதை இரு பொருள் பட எழுதியிருக்கிறார் கே எஸ் ஜி. இப்பாடலுக்கு எளிமையான ஆனால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியும் இசையை அமைத்திருந்தார் சலபதிராவ். டி எம் சௌந்தரராஜன் இதற்கு மேலும் உயிரூட்டியிருந்தார் தனது தெளிவான உச்சரிப்பின் மூலம்.

அறிவுரை கூறும் பாடலிலிருந்து ஒரு காதல் பாடலுக்கு இசையமைக்கும்போதுதான் என்ன ஒரு மாற்றம் இவரது இசையில். "தேன் உண்ணும் வண்டு" பாடலில்! ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் மாண்டலின், வயலின், புல்லாங்குழல் என்று இனிமையான இசைக்கருவிகளுடன், ஏ எம் ராஜா - பி சுசீலாவின் குரல்களும் இழையும்போது தேனின் இனிமையை நாம் அனுபவிக்கிறோம். கவிஞர் காமாட்சி சுந்தரத்தின் இனிமையான வரிகளில் இன்றும் நம் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது இந்த "தேன் உண்ணும் வண்டு"

"ஜாலிலோ ஜிம்கானா" என்று ஜாலியாக பாடல் ஆரம்பித்தாலும் அப்பாடலிலும் ஒரு தத்துவத்தை புகுத்தியிருக்கிறார் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். பாடலின் இறுதியில் வரும் இரண்டு வரிகள்."வாழ்விலும் தாழ்விலும் காணும் ஆனந்தமே, வானவில்லாய் மறைந்தாலும் ஜாலிலோ ஜிம்கானா" இப்பாடல் வெறும் அர்த்தமற்ற பாடல் என்று கூறிவிட முடியாது. பாடலின் மெட்டு அது வரை கேட்டிராதது. இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடல். 

ஜிக்கியின் குரலில் துள்ளலான "பச்சைக்கிளி பாடுது" மென்மையான "துன்பம் சூழும் நேரம், என்னைக் கொஞ்சம் பாரும்" பாடல்கள்.

அமரதீபத்திற்கு பின் அவர் இசையமைத்த படம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். ஆனால் அனைத்தும் சுமார் ரகம் என்று விமர்சிக்கப்பட்டது. பாடல்களும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் அமரதீபத்தின் வெற்றியில் சலபதிராவுக்கு இருந்த பெரும்பங்கை ஸ்ரீதர் நினைவில் வைத்திருந்தார். "மீண்ட சொர்க்கம்" என்ற ஒரு உன்னத காதல் காவியத்தை அவர் இயக்க நினைத்தபோது சலபதிராவுக்கே வாய்ப்பளித்தார். இப்படம் 

"துயிலாத பெண்ணொன்று கண்டேன்" என்று தென்னஞ்சோலையிலிருந்து வீசும் இளம்தென்றல் போன்று ஏ எம் ராஜாவின் குரலில் ஒரு பாடல். பின்னர் பாகேஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் அமைந்த "கலைஏ என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" ஏ எம் ராஜா, பி சுசீலா இருவரது பாடல் வடிவங்களும் மிக மிக இனிமை. அதிலும் சுசீலாவின் குரலில் பாடலின் இறுதியில் உச்சத்தைத் தொடும்போது என்ன ஒரு பாவம்! ஏ எம் ராஜாவோ தனது தேன் குரலாலேயே நம்மை மயக்கிவிடுகிறார். இவரது குரல் மிகவும் மென்மையாகத் தோன்றினாலும் மிக அனாயாசமாக உச்சத்தைத் தொடுகிறார்.

அடுத்து "மன நாட்டிய மேடையில் ஆடினேன்" என்ற பி சுசீலாவின் பாடல். பல்லவி முடிந்ததும் இடையிசையாக விறுவிறுப்புடன் ஒலிக்கும் வயலின்கள், பின் அந்த இசை அப்படியே இறங்கிவந்து நீரூற்று போன்ற சிதார் இசை - இங்கு இயக்குனரைப் பாராட்ட வேண்டும், இவ்விடத்தில் நாயகி போல பொலவென கண்ணீர் உகுப்பதைக் காட்டியிருப்பார் - எல்லாம் முடிந்ததும் அமைதியாக "புவி வாழ்வினில் காதல் இன்பம், அதில் ஏழையின் காதல் துன்பம்" என்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சுசீலா பாடும் விதம், "உயிர்க் காதலிலே, உடல் மேடையிலே, இந்த வாழ்க்கையின் முடிவெங்கே" என்ற வரிகள் கதையின் முடிச்சை உணர்த்துகின்றன. இறுதியில் மன நாட்டிய மேடையில் ஆடினேன் என்று சுசீலா விசும்பலுடன் பாடலை நிறைவு செய்வது "TOP CLASS". இந்தப் பாடலில் சலபதிராவின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. நாயகியின் உணர்வுகளுக்கேற்ப இசையை நன்கு வளைத்து, அவளது சங்கடத்தை ஒவ்வொரு திருப்பத்திலும் வெளிப்படுமாறு இசையமைத்திருக்கிறார். கவியரசர் ஒரு கவிக்காவியமே புனைந்திருக்கிறார் இப்பாடலில். "ஆடும் அருள்ஜோதி" என்றொரு நாட்டிய பாடல், சீர்காழி கோவிந்தராஜன் - எம் எல் வசந்தகுமாரி இருவரது குரலில். இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடலே.

அடுத்து மீண்டும் ஸ்ரீதர் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு - புனர் ஜென்மம். இதில் தீம் பாடலான "என்றும் துன்பமில்லை ஒரு சோகமில்லை" என்ற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. டி எம் எஸ், சுசீலா, பி பி எஸ் ஆகியோரது குரல்களில். மூன்றும் முறையே உத்வேகம், நிராசை, உளைச்சல் என்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மூன்றுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சலபதிராவின் திறமையைக் காட்டுகிறது. "உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்போதிலே" என்ற பாடல் ஒன்றான உள்ளங்கள் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பதை நன்கு உணர்த்துகிறது. 
Image may contain: 1 person, sunglasses, eyeglasses and closeup

அடுத்து உத்தமி பெற்ற ரத்தினம் என்ற படத்திற்கு இசையமைத்தார் சலபதிராவ். இதில் வரும் "தேடிடுதே வானமிங்கே" என்ற பி பி எஸ் குரலில் ஒலிக்கும் பாடல் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல். 1983 வரை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன் அதில். பிறகு வான வெளியில் தொலைந்தே போயிற்று இந்தப் பாடல். பாடலை இயற்றியவர் அ மருதகாசி. இத்தனை சிறப்புகள் பெற்றிருந்தும் இப்பாடல் காற்றில் கரைந்ததேனென்று தெரியவில்லை.

சலபதிராவ் கடைசியாக தமிழில் இசையமைத்த படம் மாடி வீட்டு மாப்பிள்ளை."அதில் வரும் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு" என்ற பாடல் மிகவும் பிரபலம். "வைகை பெருகிவர, வண்ண மணல் ஊர்ந்து வர" என்ற ஜெயலலிதா பாடும் பாடல் சுமார் ரகம்.

ஒருமுறை உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டதற்கு ஜெயலலிதா "சலபதிராவ்" என்று சொன்னார். தமிழிலும் தெலுங்கிலும் அவர் இசையமைத்த படங்களில் நடித்த அவருக்கு சலபதிராவின் பெருமை நன்கு தெரிந்திருக்கிறது.

யாருக்கும் வளைந்து தரமாட்டார் சலபதி ராவ். தன்மானத்தை இழந்து வாய்ப்புகளை பெற்று எந்தப் பயனும் இல்லை என்பது அவரது கொள்கை. அதனால் அவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம். எண்ணிக்கையில் மிகை குறைந்த பாடல்களே அளித்திருந்தாலும் அத்தனையும் சொக்கத்தங்கம். எல்லாத் தரப்பினராலும் ரசிக்கப்படும் இசையை நமக்கு அளித்திருக்கிறார் சலபதி ராவ். 

நலிந்த இசைக்கலைஞர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மருத்துவரான தனது மனைவி டாக்டர் ஜமுனா குமாரியிடம், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய் என்று கூறி வந்தார். இவ்வாறு ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வந்த சலபதிராவ், 1994லில் தனது 74ஆம் வயதில் காலமானார். இவர் காலமானாலும் இவரது இசை இன்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

COURTESY: MR Vamanan Narasimhan

Thursday, September 14, 2017

எஸ் ராஜேஸ்வரராவ்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 14. 
திரு எஸ் ராஜேஸ்வரராவ் 

ராஜேஸ்வரராவ் (இனி ராவ் என்று அழைப்போம்) விஜயநகரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சந்நியாசி ராவ் மிருதங்க வித்வான். துவாரம் வேங்கடசாமி நாயுடுவிற்கு வாசித்து வந்தார். ராவிற்கு நான்கு வயதிலேயே ராகங்களை அடையாளம் காட்டும் திறமை வந்து விட்டது. ஏழு வயதில் ஹரிகதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

1930 களில் பிரபலமாகத் தொடங்கிய கிராமபோன் கம்பெனிகள் நல்ல குரல்களை பதிவு செய்ய தகுதியான ஆட்களை அமர்த்தினர். அப்படி ஹட்சின்ஸ் (HUTCHINS) கம்பெனியால் அடையாளம் காணப்பட்டவர் ராவ். அவரது குரலில் "பகவத் கீதை" கிராமபோன் இசைத்தட்டு வெளிவந்தது.

பேசும்படங்கள் வெளிவரத்துவங்கிய காலம் அது. இசைத்தட்டுக்களில் பாடிய இளைஞர்கள் மீது தயாரிப்பாளர்களின் கவனம் திரும்பியது. வேல் பிக்சர்சின் தெலுங்குப் படமான "ஸ்ரீ கிருஷ்ண லீலாலு" படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். உடன் நடித்தவர் திரு வி என் சுந்தரம். "ஸ்ரீ கிருஷ்ணா லீலா (1935), மாயா பஜார் (1936) ஆகிய படங்களில் பாடி நடித்து வந்த ராவ், "கீசக வதம்" என்ற படத்தில் நடிக்க கல்கத்தா பயணமானார். அப்போது நியூ தியேட்டர்ஸ் சைகலை வைத்து "தேவதாஸ்" படத்தை எடுத்து பெரும் வெற்றி பெற்றிருந்தது. கீசக வதத்தில் நடித்ததுடன், சைகலிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றார் ராவ். நியூ தியேட்டர்ஸ் கலைஞர்களான ஆர் சி போரால், பங்கஜ் மல்லிக் இவர்கள் மூலம் ஹிந்தி வங்காளப் பாடல்களின் மெல்லிசையையும் அறிந்து கொண்டார். சைகலிடம் ஒரு ஹார்மோனியம் பரிசாகப் பெற்றார் ராவ்.

1938 ல் சென்னை திரும்பிய அவர், சிதார், கரபஹார், ஹார்மோனியம், மிருதங்கம், டோலக், தப்லா ஆகியவற்றை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். "விஷ்ணு லீலா" (1938) என்ற தமிழ்ப் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார். அதற்கடுத்து "இல்லாளு" என்ற தெலுங்குப் படத்தில் இசையமைத்து நடித்தார். இந்தப் படத்துடன் இவரது நடிப்பு முடிவுக்கு வந்தது.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோவில் 1940ல் வேலைக்கு சேர்ந்தார். அங்கு "மங்கம்மா சபதம் (1943), தாசி அபரஞ்சி (1944) சந்திரலேகா (1948), அபூர்வ சகோதரர்கள் (1949) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். மங்கம்மா சபதத்தில் சில மேற்கத்திய மெட்டுக்களை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் இசையமைத்திருந்தார். I, I, I, I LIKE YOU VERY MUCH என்ற பாடல் "ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே" என்ற பாடல், வசுந்தராதேவி அவர்களால் பாடி ஆடப் பட்டு பல ரசிகர்களின் உள்ளங்கள் கிறுகிறுத்துப் போனது.

சந்திரலேகாவிலும் உலக இசை தொடர்ந்தது. அயல்நாட்டு மெட்டுக்களை நல்ல மேற்கத்திய வாத்தியங்களுடன் கொடுத்து வெற்றி அடைந்தார் ராவ். "ஐலோ பக்கிரியாமா" என்ற பாடலில் வரும் உளறல்கள் FIREFLY என்ற படத்தில் வரும் DONKEY SERENADE பகுதியைத் தழுவியது. இப்பாடல் ஒரு உக்ரேனியன் பாடல் என்று கூறப்படுகிறது. உச்சக்கட்டக் காட்சியில் வரும் ட்ரம் டான்ஸில் கதகளி, கண்டி ஆகிய நடன அசைவுகள் உண்டு. இப்படத்தில் வாசனின் விருப்பத்திற்கேற்ப நல்ல இசையை உள்வாங்கிக்கொண்டு நமது ரசிகர்களுக்கேற்ப அளிக்கும் கடமையை மட்டுமே செய்தார் ராவ்.

அபூர்வ சகோதரர்களில் இவர் சற்று சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இப்படத்தில் பானுமதி பாடும் " லட்டு வேணுமா" என்ற கலகலப்பூட்டும் பாடல், "ஓடக்காரா, ஓடக்காரா, ஓடத்தில் ஏற்றியே செல்வாய்" என்று அமைதியாகப் பாடும் ஓடப் பாட்டு (இப்பாட்டின் துவக்கம் நினைவில் இல்லை), மானும் மயிலும் ஆடும் சோலை" என்ற காதல் ரசம் ததும்பும் பாடல் ஆகியவை இவரது இசையில் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துடன் ஜெமினியில் இவரது சகாப்தம் முடிவடைந்தது.
Image may contain: 1 person, eyeglasses and text

50களில் 10 தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ராவ். மிஸ்ஸியம்மாவில் (1955) பாடல்கள் அனைத்துமே கர்நாடக இசையின் அடிப்படையில் அமைக்கப்பட்டு ரசிகர்களின் இதயங்களின் தென்றலாகத் தவழ்ந்தது. பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" "அறியாப்பருவமடா, மலர் அம்பையே வீசாதடா, மதனா" பழகத் தெரிய வேணும்" "மாயமே நானறியேன்" "எனையாளும் மேரி மாதா" "முடியுமென்றால் படியாது, படியும் என்றால் முடியாது" "வாராயோ வெண்ணிலாவே" போன்ற பாடல்கள் இன்றளவும் சாகா வரம் பெற்று விளங்குகின்றன.

அடுத்து வந்த மாதர் குல மாணிக்கத்தில் பாடல்கள் ஒன்றும் பிரகாசிக்கவில்லை. பிரேமபாசம்(1956) ல், வீசும் தென்றலிலே, பேசும் வெண்ணிலவே" "முரளீதரா, ஹரே மோகனக்ருஷ்ணா" என்று இரு அருமையான பாடல்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படத்தில் வெவ்வேறு நாட்டு இசை வடிவங்களைத் தொடும் வாய்ப்பு என்று நல்ல மெட்டுக்கள் ராவின் கைவண்ணத்தில் வந்தவண்ணம் இருந்தது."தாயே உன் செயலல்லவோ" (இரு சகோதரிகள்) "போதும் உந்தன் ஜாலமே" (கடன் வாங்கிக் கல்யாணம்), நாராயண மந்த்ரம் (பக்தப் பிரகலாதா) என்று இவரது வெற்றி வரிசை நீள்கிறது.

மாயபாஜாரில், "நீதானா என்னை அழைத்தது" "ஆஹா இன்ப நிலாவினிலே" ஆகிய இரு பாடல்களும் ராவ் இசையமைத்தவை, மற்ற பாடல்களுக்கு திரு கண்டசாலா இசையமைத்தார். பானை பிடித்தவள் பாக்கியசாலியில் ஒலிக்கும் "புருஷன் வீட்டில் வாழப்போகும்" பாடலுக்கு இசை ராவ்தான். பிறகு இப்படத்தின் மற்ற பாடல்களுக்கு எஸ் வி வெங்கட்ராமன் இசையமைத்தார்.

தன்னைப்புரிந்து கொள்ளாத இயக்குனராக இருந்தால் விலகிவிடுவார் ராவ். அப்படி பல படங்களிலிருந்து இவர் விலகியதுண்டு. வேகமாக இசையமைக்க வேண்டும்,பாட்டு உடனே வேண்டும் என்றால் அவர் சம்மதிக்க மாட்டார்.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்து இசைக்குழுக்களோ, கலைஞர்களோ வந்தாலும் ராவ் சென்று அவர்களது இசையை ரசித்து அனுபவிப்பார். ஒரு கலைஞனுக்கு அனைத்து வகை சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.

தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் ராவ். ஆந்திரப் பல்கலைக் கழத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்வானாக ஆக்கியது.

இவர் தமிழில் இசையமைத்த படங்கள்"
மங்கம்மா சபதம் - 1943
தாசி அபரஞ்சி -1944
சந்திரலேகா - 1948
அபூர்வ சகோதரர்கள் - 1949
வாழப்பிறந்தவள் - 1953 (ஜி ராமநாதனுடன்)
மிஸ்ஸியம்மா - 1955
மாதர்குல மாணிக்கம் - 1956
பிரேமபாசம் - 1956
கடன் வாங்கிக் கல்யாணம் - 1958
அவள் யார் 1959
பெற்றமனம் - 1960
விக்கிரமாதித்தன் - 1962 
பக்தப் பிரகலாதா - 1967
தசாவதாரம் - 1976

இவர் சில பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த படங்கள்:
மாயா பஜார் - 1957, பானை பிடித்தவள் பாக்கியசாலி - 1958

இவரது இசையில் பிரபலமான சில பாடல்கள்:
ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே - மங்கம்மா சபதம் 
லட்டு வேணுமா லட்டு வேணுமா - அபூர்வ சகோதரர்கள் 
மானும் மயிலும் ஆடும் சோலை - அபூர்வ சகோதரர்கள்.
நாட்டியக் குதிரை நாட்டியக் குதிரை - சந்திரலேகா 
ஆஈளோ பக்கிரியாமா - சந்திரலேகா 
பாண்டுரங்கா பாண்டுரங்கா - சக்ரதாரி 
உனக்கும் எனக்கும் - சக்ரதாரி 
முடியும் என்றால் படியாது - மிஸ்ஸியம்மா 
அறியாப் பருவமடா - மிஸ்ஸியம்மா 
தெரிந்து கொள்ளனும் பெண்ணே - மிஸ்ஸியம்மா 
பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா 
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மிஸ்ஸியம்மா 
வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா 
எனையாளும் மேரி மாதா - மிஸ்ஸியம்மா 
வீசும் தென்றலிலே - பிரேம பாசம் 
தாயே உன் செயலல்லவோ - இரு சகோதரிகள் 
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் - கடன் வாங்கிக் கல்யாணம் 
போதும் உந்தன் ஜாலமே - கடன் வாங்கிக் கல்யாணம் 
நீதானா எனை அழைத்தது - மாயா பஜார் 
ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் 
புருஷன் வீட்டில் வாழப் -போகும் பானை பிடித்தவள் பாக்கியசாலி 

ராகதேவனாகவே வாழ்ந்து, நாதத்தில் 1999 ல் சங்கமித்தார். இன்றளவும் இவரது பாடல்கள் இவர் பெயர் பாடிக் கொண்டிருக்கின்றன. என்றும் பாடும்.

(நன்றி: எழுத்தாளர் திரு வாமனன் அவர்கள்)

Monday, August 14, 2017

ஆர் கோவர்த்தனம்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 13: ஆர் கோவர்த்தனம். 

சுதர்சனம் மாஸ்டரின் தம்பி. அபார ஸ்வர ஞானம் உடையவர். இவரது பாடல்கள் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல். குறிஞ்சிப் பூ போன்று அரிதாக இசை அமைத்தவர், ஆனால் அத்தனையும் ரத்தினங்கள்.

தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டரின் பாடல்களை கிராமபோனுக்காக, சர்மா சகோதரர்கள் "மயூரா ஃபிலிம் ஆர்கெஸ்டிரா" மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பாகவதரே மீண்டும் பாடிக் கொண்டிருந்தார். இதை அந்த இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் ஒருவரின் 10 வயது தம்பி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். மதிய உணவு வேளையில் பியானோவின் கட்டைகளை ஒரே கையால் இயக்கி பாகவதர் பாடிய "உன் அழகைக் காண இரு கண்கள் போதாதே" என்ற பாடலை வாசித்தான். அதைக் கேட்ட சர்மா "எங்கே இதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்றவுடன் அந்த சிறுவன் கட கட என்று ஸ்வரங்களை ஒப்புவித்தான். அவனது அண்ணனுக்கே படு ஆச்சரியம்.

அதே வருடம் இன்னொரு நாள் ஏ வி மெய்யப்ப செட்டியார் தன நண்பர்களுடன் அமைத்திருந்த பிரகதி ஸ்டுடியோவில் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் படப் பாடலின் ஒலிப்பதிவு. முன்பு குறித்த ஹார்மோனிஸ்ட் அங்கும் பணியாற்றிக் கொண்டிருந்தார். உடன் அவரது தம்பியும் வந்திருந்தான். 

"இவன் என் தம்பி, என்ன பாடினாலும் ஸ்வரங்களை அப்படியே ஒப்பித்துவிடுவான்" என்று ராஜத்தினம் பிள்ளையிடம் கூறினார் அந்த ஹார்மோனிஸ்ட். "அப்படியா, எங்கே நான் வாசிப்பதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்று சொல்லி தனது நாதஸ்வரத்தில் தோடி ராகத்தை வாசித்தார். அந்த சிறுவன் ஒரு காகிதத்தில் அதன் ஸ்வரக்கோர்வையை அப்படியே எழுதி பிள்ளையிடம் தந்தான். அதைக் கண்ட பிள்ளை ஆசாரியத்துடன் " இவனுக்கு ஸ்வரக்குட்டி என்று பெயர் வையுங்கள். அபார ஞானம் உள்ளவன்" என்று அவனுக்கு ஒரு புதியதொரு பெயர் சூட்டினார்.

அந்த ஹார்மோனிஸ்ட்தான் பின்னாளில் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய ஆர் சுதர்சனம். அவரது தம்பிதான் ஆர் கோவர்த்தனம்.

ஏ வி எம்மின் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் மும்முரமாக ஆர் சுதர்சனம் ஈடுபட்டிருந்ததால் அவரது தம்பியை செட்டியார் கிராமபோன் இசைக்குழுவிற்கு இசையமைப்பாளராக நியமித்தார் . ஆனால் 1953 ல் திரைப்படங்களுக்காக ஒளிப்பதிவு செய்த பாடல்களையே எடிட் செய்து இசைத்தட்டில் பதிவு செய்யும் முறை வந்து விட்டது. ஆகையால் தனியாக இன்னொருமுறை பதிவு செய்யும் முறை முடிவடைந்தது. ஆனால் கோவர்த்தனத்தை இழக்க செட்டியார் விரும்பவில்லை. அவரது அண்ணனுக்கு உதவியாக அவரை அமர்த்தினார். சில படங்கள் மிகவும் சீக்கிரமாக வெளிவர வேண்டிய சந்தர்ப்பங்களில் அண்ணனும் தம்பியுமாக ஆளுக்கொரு ரீலைப் பிரித்துக் கொண்டு பின்னணி இசையை செய்து முடிப்பார்களாம்.

ஏ வி எம்மின் தலைமை மேலாளராக இருந்த வாசுதேவ மேனன், தான் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கோவர்த்தனத்திற்கு அளித்தார். பிரேம் நசீரை கதாநாயகனாக வைத்து "ஒரே வழி" என்ற படத்தில் "ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி" என்ற கண்ணதாசன் பாடலுக்கு கோவர்த்தனம் இசையமைத்தார். அவரது திறமையை உணர்ந்த மேனன், தனது அடுத்த படமான "கைராசி" படத்திலும் கோவர்த்தனத்தை இசையமைப்பாளராக ஆக்கினார். இதன் பாடல்களும் படமும் பெரிய வெற்றி.



அடுத்து "பட்டணத்தில் பூதம்" கண்ணதாசன் தயாரிக்கத் துவங்கி பின்னர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த படம். அந்தப் படப் பாடல்களும் பெரும் வெற்றி. 

"மெட்டுப் போட்டபின் பாடலை எழுத சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்திற்கும் முதல் பாடல்தான் எழுதப் பட்டது. வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டால்தான் பாடல் உணர்வுபூர்மாக இருக்கும். அதனால்தான் எனது பாடல்கள் வெற்றியடைந்தன" என்றுகூறுவார் கோவர்த்தனம். ஒரே ஒரு முறை மெட்டுப் போட்டுவிட்டு பாடலை எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கஜல் பாணியில் ஒரு மெட்டுப் போட, அதற்கு கண்ணதாசனின் வரிகள் ஏற்றதாக அமையவில்லை. ஆனால் கண்ணதாசனின் பாடல் வரிகளின் சிறப்பை உணர்ந்த கோவர்த்தனம் தயாரிப்பாளரிடம், மெட்டை செமி கிளாசிகலாக மாற்ற அனுமதி பெற்று பிறகு வேறு மெட்டு அமைத்தார். அந்தப் பாடல்தான் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி"

"வாய்ப்புகளைத் தேடி நான் என்றும் அலைந்ததில்லை. என்னைத் தேடி வந்தவர்களுக்கு மட்டும் நான் இசையமைத்தேன்" என்று கூறுவார் கோவர்த்தனம். அதனால்தான் அவருக்கு படங்கள் குவியவில்லை. மாறாக இசையமைப்பாளர்கள் இவரது உதவியை நாடினார்கள். அதற்கு காரணம் அவருடைய அசாத்தியத் திறமை, அனைவருடனும் சுமுகமாகப் பழகும் எளிமை.

திரை இசை மேதை சுப்பராமன், சுதர்சனம் போன்றோரிடம் உதவியாளாராக இருந்த கோவர்த்தனம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசைக்குழுவின் கண்டக்டராக இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பிரிந்த பின்னும், 1970 வரை விஸ்வநாதனிடம் பணிபுரிந்தார். பிறகு 1976 முதல் 90 வரை இளையராஜாவிடம் பணியாற்றினார். இறுதியாக தேவாவிடம் பணியாற்றினார். "தேவா ஒருவர்தான் என்னை மதித்து என்னுடைய சொல்படி நடக்கிறார்" என்பார் கோவர்த்தனம்.

50 ஆண்டுகளாக திரைப்பட இசையுடன் நேரடித் தொடர்பு உடைய கோவர்த்தனம் திரை இசை போக்குகளைக் குறித்து ஆழமான பார்வை உடையவர். ராமநாதன் கர்நாடக சங்கீதத்தை மக்கள் விரும்பும் வகையில் அளித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இந்துஸ்தானி இசையின் மேருகுகளைக் கூட்டினார். இளையாராஜாவின் இசை பாமரர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, பின்னர் கம்ப்யூட்டர் வந்தவுடன் அவரது இசையின் போக்கு மாறி விட்டது என்று கூறுகிறார் கோவர்த்தனம்.

இவர் இசையமைத்த படங்கள்:
ஒரே வழி -1959
கைராசி - 1960
பட்டணத்தில் பூதம் - 1967
பூவும் பொட்டும் - 1968
பொற்சிலை - 1968
அஞ்சல் பெட்டி - 1969
வரப்பிரசாதம் 1975

இவர் இசையில் பிரபலமான பாடல்கள்:
காத்திருந்தேன் காத்திருந்தேன் - கைராசி 
அன்புள்ள அத்தான் - கைராசி 
கண்ணும் கண்ணும் பேசியதும் - கைராசி 
காதல் என்னும் ஆற்றினிலே - கைராசி 
அந்த சிவகாமி மகனிடம் - பட்டணத்தில் பூதம் 
உலகத்தில் சிறந்தது எது - பட்டணத்தில் பூதம் 
நாதஸ்வர ஓசையிலே - பூவும் பொட்டும் 
உன்னழகைக் கண்டு கொண்டால் - பூவும் பொட்டும் 
எண்ணம் போல கண்ணன் வந்தான் - பூவும் பொட்டும் 
முதல் என்பது தொடக்கம் - பூவும் பொட்டும் 
பத்துப் பதினாறு முத்தம் - அஞ்சல் பெட்டி 520
அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க - பொற்சிலை
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் - வரப்பிரசாதம். 

இப்போது வயது முதிர்ந்த நிலையில், பல பொருளாதார பிரச்சினைகள் இருப்பினும் தனது சுயமரியாதையை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். 2017 செப்டம்பர் 8 ஆம் தேதி சேலத்தில் அவரது இல்லத்திலேயே காலமானார். இசைக்காகவே வாழ்ந்து மறைந்த அவரை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

நன்றி - திரு வாமனன் அவர்கள்.






Saturday, August 12, 2017

A M ராஜா

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 12" - A M ராஜா 

தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும் இவரது குரலினிமை உறங்கவில்லை..தென்றலில் தவழ்ந்தும, திங்களில் ஒளிர்ந்தும் நம்மை மகிழ்வித்தது.

A M ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தவர் ராஜா. 

ரேணுகாபுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின 
படிப்பு நன்றாக வந்தது.பாட்டும்நன்றாக வந்தது. எங்கு சென்றாலும் அவனைப் பாட சொல்வார்கள் என்று ராஜாவின் தமக்கை நாகம்மா கூறுகிறார்.

பள்ளியிறுதி முடித்து இண்டர்மீடியட் படிக்க, வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.அப்போது கல்லூரி இசைப்போட்டியில் வென்ற ராஜாவின் குரலை பதிவு செய்ய விரும்பியது HMV நிறுவனம். "ஓ ஹ்ருதய ராணி" "எந்த தூரம் ஈ பயணம்" என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி மெட்டமைத்துப் பாடிய பாடல்கள் பதிவாயின

இந்த காலக்கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்எஸ் வாசன். கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக திருப்தி தராததால் "ஓ ஹ்ருதயஹ்ருதய ராணி" பாடலைக் கேட்ட அவர் A M ராஜாவை பாட வைக்க விரும்பினார். "சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம், சுக ஜீவனாதரம்" என்ற பாடல் அவர் பாடி புகழ் பெற்றது..பின்னர் அவர்அவர் இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கும் வரை பாடல்கள்தான் பாடி வந்தார்.

மகேஸ்வரி என்ற படத்தின் "அழகுநிலாவின் பவனியிலே" என்ற பாடல் பதிவின்போது ஜிக்கியிடம் அவரை விரும்புவதாகவும் அவரை மணக்க ஆசைப்படுவதாகவும் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் ராஜா. பின்னர் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு ரயில் பயணத்தின் போது கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதருடன் ராஜா பயணம் செய்ய நேர்ந்தது.. இருவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு வாய்ப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதர் படம் இயக்கினால் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

ஸ்ரீதருக்கு வாய்ப்பும் கிடைத்தது.வாக்கும் காப்பாற்றப்பட்டது.தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்தது.- படம் கல்யாணப் பரிசு.

ராஜாவின் இசையில். ராஜா. சுசீலா, ஜிக்கி ஆகியோரின் குரலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. "துள்ளாத மனமும் துள்ளும், வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் ஒருவன்" என்று அனைத்துப் பாடல்களுமே வெற்றி. "உன்னைக் கண்டு நான் ஆட" பாடல் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீப ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
'தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 11" - A M ராஜா 

தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும் இவரது குரலினிமை உறங்கவில்லை..தென்றலில் தவழ்ந்தும, திங்களில் ஒளிர்ந்தும் நம்மை மகிழ்வித்தது.

A M ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தவர் ராஜா. 

ரேணுகாபுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின 
படிப்பு நன்றாக வந்தது.பாட்டும்நன்றாக வந்தது. எங்கு சென்றாலும் அவனைப் பாட சொல்வார்கள் என்று ராஜாவின் தமக்கை நாகம்மா கூறுகிறார்.

பள்ளியிறுதி முடித்து இண்டர்மீடியட் படிக்க, வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.அப்போது கல்லூரி இசைப்போட்டியில் வென்ற ராஜாவின் குரலை பதிவு செய்ய விரும்பியது HMV நிறுவனம். "ஓ ஹ்ருதய ராணி" "எந்த தூரம் ஈ பயணம்" என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி மெட்டமைத்துப் பாடிய பாடல்கள் பதிவாயின

இந்த காலக்கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்எஸ் வாசன். கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக திருப்தி தராததால் "ஓ ஹ்ருதயஹ்ருதய ராணி" பாடலைக் கேட்ட அவர் A M ராஜாவை பாட வைக்க விரும்பினார். "சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம், சுக ஜீவனாதரம்" என்ற பாடல் அவர் பாடி புகழ் பெற்றது..பின்னர் அவர்அவர் இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கும் வரை பாடல்கள்தான் பாடி வந்தார்.

மகேஸ்வரி என்ற படத்தின் "அழகுநிலாவின் பவனியிலே" என்ற பாடல் பதிவின்போது ஜிக்கியிடம் அவரை விரும்புவதாகவும் அவரை மணக்க ஆசைப்படுவதாகவும் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் ராஜா. பின்னர் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு ரயில் பயணத்தின் போது கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதருடன் ராஜா பயணம் செய்ய நேர்ந்தது.. இருவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு வாய்ப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதர் படம் இயக்கினால் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

ஸ்ரீதருக்கு வாய்ப்பும் கிடைத்தது.வாக்கும் காப்பாற்றப்பட்டது.தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்தது.- படம் கல்யாணப் பரிசு.

ராஜாவின் இசையில். ராஜா. சுசீலா, ஜிக்கி ஆகியோரின் குரலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. "துள்ளாத மனமும் துள்ளும், வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் ஒருவன்" என்று அனைத்துப் பாடல்களுமே வெற்றி. "உன்னைக் கண்டு நான் ஆட" பாடல் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீப ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

பிறகு இவர் விடிவெள்ளி, தேன் நிலவு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். விடிவெள்ளி படத்தில் "இடை கையிரண்டில் ஆடும்" என்று சிவாஜி கனேசனுக்காக இவர் பாடிய பாடல், "கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைஅன்பை" "பண்ணோடுபண்ணோடு பிறந்தது தாளம்" "எந்நாளும் வாழ்விலே" போன்ற பாடல்கள் பிரபலமாயின. தேன் நிலவு படத்தில் "பாட்டுப் பாடவா" என்ற ஜனரஞ்சக பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. "காலையும் நீயே, மாலையும் நீயே" பாடல் பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி ஆகிய ராகங்கள் அடங்கிய ராகமாலிகையில் அமைந்து இசை விரும்பிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. மேலும் " சின்னக் சின்னக் கண்ணிலே" "ஓஹோ எந்தன் பேபி" "ஊரெங்கும் தேடினேன்" மலரே மலரே தெரியாதோதெரியாதோ" போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.

ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீதருடனான ராஜாவின் உறவு இப்படத்துடன் முறிந்தது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கவே ராஜா மறுத்து விட்டார். பிறகு எம் ஜி ஆர் போன்றோரின் தலையீட்டினால் செய்து முடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசையமைக்க வாங்கியிருந்த காசோலையையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள், ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, வீட்டு மாப்பிள்ளை, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகியவை.

A M ராஜா இசையமைத்த படங்கள்:
கல்யாணைப் பரிசு (1950) 
விடிவெள்ளி (1960)
தேன்நிலவு (1961)
ஆடிப்பெருக்கு (1962)
அன்புக்கோர் அண்ணி (1960)
வீட்டு மாப்பிள்ளை (1972)
எனக்கொரு மகன் பிறப்பான் (1975)

இசையமைக்குமுன் பிறர் இசையமைப்பில் ராஜா பாடிய சில பாடல்கள்:
சம்சாரம், சம்சாரம் (சம்சாரம்)
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் - பி சுசீலாவுடன்-பி சுசீலாவின் முதல் பாடல் இது)
பேசும் யாழே பெண் மானே - நாம் 
சின்ன சின்ன வீடு கட்டி - மருமகள் 
நான் ஏன் வர வேண்டும் ஏதுக்க்காகவோ - பூங்கோதை 
துள்ளியே ஓடுமே வாழ்வுமே - வஞ்சம் 
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே - அவன் 
அன்பே வா, அழைக்கின்றதெந்தன் மூச்சே - அவன் 
சிற்பி செதுக்காத -பொற்சிலையே எதிர்பாராது 
சிங்காரப் பைங்கிளியே பேசு - மனோகரா

இவரது இசையமைப்பில் சில வெற்றிப் பாடல்கள்:
உன்னைக் கண்டு நான் ஆட - கல்யாணப் பரிசு 
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ - கல்யாணப் பரிசு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாணப் பரிசு
காதலிலே தோல்வியுற்றான் - கல்யாணப் பரிசு
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி
இடை கையிரண்டில் - ஆடும் - விடிவெள்ளி
பண்ணோடு பிறந்தது தாளம் - விடிவெள்ளி 
பாட்டுப் -பாடவா- தேன் நிலவு 
ஓஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு 
சின்ன சின்னக் கண்ணிலே - தேன் நிலவு
காலையும் நீயே மாலையும் நீயே - தேன் நிலவு 
மலரே மலரே தெரியாதோ - தேன் நிலவு 
ஊரெங்கும் தேடினேன் -தேன் நிலவு 
கண்ணிழந்த மனிதர் முன்னே - ஆடிப்பெருக்கு 
அன்னையின் அருளே வா வா - ஆடிப்பெருக்கு 
தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு 
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ஆடிப்பெருக்கு
ராசி நல்ல ராசி - வீட்டு மாப்பிள்ளை 
மலரே நீ என் மலரல்ல - வீட்டு மாப்பிள்ளை

தனது இனிய இசையாலும், காந்தக் குரலாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட A M ராஜா,ஒரு இசைக் கச்சேரி செய்ய பயணம் செய்தபோது, ரயில் பிளாட்ஃபாரத்தின் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். எதிர்பாராத இந்த மரணம் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் அது பொய்யல்ல. மறக்க முடியாத ஒரு பண்பான மனிதர் திரு A M ராஜா.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)'

பிறகு இவர் விடிவெள்ளி, தேன் நிலவு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். விடிவெள்ளி படத்தில் "இடை கையிரண்டில் ஆடும்" என்று சிவாஜி கனேசனுக்காக இவர் பாடிய பாடல், "கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைஅன்பை" "பண்ணோடுபண்ணோடு பிறந்தது தாளம்" "எந்நாளும் வாழ்விலே" போன்ற பாடல்கள் பிரபலமாயின. தேன் நிலவு படத்தில் "பாட்டுப் பாடவா" என்ற ஜனரஞ்சக பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. "காலையும் நீயே, மாலையும் நீயே" பாடல் பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி ஆகிய ராகங்கள் அடங்கிய ராகமாலிகையில் அமைந்து இசை விரும்பிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. மேலும் " சின்னக் சின்னக் கண்ணிலே" "ஓஹோ எந்தன் பேபி" "ஊரெங்கும் தேடினேன்" மலரே மலரே தெரியாதோதெரியாதோ" போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.

ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீதருடனான ராஜாவின் உறவு இப்படத்துடன் முறிந்தது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கவே ராஜா மறுத்து விட்டார். பிறகு எம் ஜி ஆர் போன்றோரின் தலையீட்டினால் செய்து முடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசையமைக்க வாங்கியிருந்த காசோலையையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள், ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, வீட்டு மாப்பிள்ளை, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகியவை.

A M ராஜா இசையமைத்த படங்கள்:
கல்யாணைப் பரிசு (1950) 
விடிவெள்ளி (1960)
தேன்நிலவு (1961)
ஆடிப்பெருக்கு (1962)
அன்புக்கோர் அண்ணி (1960)
வீட்டு மாப்பிள்ளை (1972)
எனக்கொரு மகன் பிறப்பான் (1975)

இசையமைக்குமுன் பிறர் இசையமைப்பில் ராஜா பாடிய சில பாடல்கள்:
சம்சாரம், சம்சாரம் (சம்சாரம்)
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் - பி சுசீலாவுடன்-பி சுசீலாவின் முதல் பாடல் இது)
பேசும் யாழே பெண் மானே - நாம் 
சின்ன சின்ன வீடு கட்டி - மருமகள் 
நான் ஏன் வர வேண்டும் ஏதுக்க்காகவோ - பூங்கோதை 
துள்ளியே ஓடுமே வாழ்வுமே - வஞ்சம் 
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே - அவன் 
அன்பே வா, அழைக்கின்றதெந்தன் மூச்சே - அவன் 
சிற்பி செதுக்காத -பொற்சிலையே எதிர்பாராது 
சிங்காரப் பைங்கிளியே பேசு - மனோகரா

இவரது இசையமைப்பில் சில வெற்றிப் பாடல்கள்:
உன்னைக் கண்டு நான் ஆட - கல்யாணப் பரிசு 
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ - கல்யாணப் பரிசு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாணப் பரிசு
காதலிலே தோல்வியுற்றான் - கல்யாணப் பரிசு
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி
இடை கையிரண்டில் - ஆடும் - விடிவெள்ளி
பண்ணோடு பிறந்தது தாளம் - விடிவெள்ளி 
பாட்டுப் -பாடவா- தேன் நிலவு 
ஓஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு 
சின்ன சின்னக் கண்ணிலே - தேன் நிலவு
காலையும் நீயே மாலையும் நீயே - தேன் நிலவு 
மலரே மலரே தெரியாதோ - தேன் நிலவு 
ஊரெங்கும் தேடினேன் -தேன் நிலவு 
கண்ணிழந்த மனிதர் முன்னே - ஆடிப்பெருக்கு 
அன்னையின் அருளே வா வா - ஆடிப்பெருக்கு 
தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு 
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ஆடிப்பெருக்கு
ராசி நல்ல ராசி - வீட்டு மாப்பிள்ளை 
மலரே நீ என் மலரல்ல - வீட்டு மாப்பிள்ளை

தனது இனிய இசையாலும், காந்தக் குரலாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட A M ராஜா,ஒரு இசைக் கச்சேரி செய்ய பயணம் செய்தபோது, ரயில் பிளாட்ஃபாரத்தின் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். எதிர்பாராத இந்த மரணம் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் அது பொய்யல்ல. மறக்க முடியாத ஒரு பண்பான மனிதர் திரு A M ராஜா.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

Friday, July 21, 2017

வேதா

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# - 11 - வேதா 

முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

அந்நாளில் வெங்கடாசலம் என்பவரது வீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.

50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.

வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.

அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.

அடுத்து "மின்னல் வீரன்" என்ற படம். ஏ எல் நாராயணன் கதை வசனம் எழுதி நான்கு பாடல்களையும் எழுதியிருந்தார். சில தோல்விப் படங்களின் பாடல்களும் காணாது போய்விடுவதுபோல் இப்படத்தின் பாடல்களும் காணாது போயின. "கனியே, கண்ணான செல்வமே, தாலேலோ" என்று P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலும் அது போல காணாது ,போய்விட்டது. "காலையிலே வலைஎடுத்து கால் வாயிற்று கஞ்சிக்காக நாள் நாள் முழுதும் பாடுபடும் தொழிலாளி" என்ற பாடலும் அவ்வாறேதான். கரைமேல் பிறக்க வைத்தான் என்பது போல் இதுவும் ஒரு மீனவப் பாடல்தான். இன்னொரு பாடல் "கண்ணோடு கண்ணினை நோக்கின்" என்ற ஜெயலக்ஷ்மி (ராதா) பாடும் பாடல். சுத்தமான கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது. ஏ எல் நாராயணின் இலக்கிய மணம் மிக்க வரிகளுக்கு ஏற்றதொரு இசையை வழங்கியிருந்தார் வேதா 

(நான் இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம், வேதா என்றாலே ஹிந்திப் பட மெட்டுக்களை காப்பி அடிப்பவர் என்ற ஒரு கருத்து நிலவுவதுதான். அவர் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது - குறிப்பாக மாடர்ன் தியேட்டார்ஸ் சுந்தரம். வேதா அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.)

வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை. "கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா. அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)

அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரியின் தழுவல் இது.

அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).

இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா 

அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பின்னாலே" என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்து விடுகிறது.

வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.

"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் 
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"

"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேடை மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.

அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது. 

அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் உன்னோடு மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.

அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை, செய்ய கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே 
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.

நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.

சின்னஞ்சிறு உலகம் என்றொரு படம்,நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.

காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?

இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971. 

மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன 

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

Wednesday, July 19, 2017

ஆர் சுதர்சனம்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 10 ஆர் சுதர்சனம்.

ஏ.வி.எம் என்ற சாம்ராஜ்யத்தில் ஐக்கியமானவர் சுதர்சனம். அவரது பேரைச் சொல்லிக்கொண்டிருக்கும் பாடல்கள் ஏராளம். அவரது இசையில் உருவான பாடல்களையும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் இன்று காண்போம்.

சுதர்சனம் 1914ல் ராமகிருஷ்ண செட்டியாரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தார். சுதர்சனத்திடம் இயல்பாக இசைத்திறமை இருந்தது. மெய்யப்ப செட்டியார் பங்கு வகித்த சரஸ்வதி ஸ்டோர்ஸ், நான்கு நாடகங்களை கிராமபோன் இசைத்தட்டுக்களாக தயாரிக்கும்போது அவற்றிற்கு ஹார்மோனியம் வாசிக்க சுதர்சனம் அமர்த்தப்பட்டார். பின்னர் அங்கேயே 60 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு கம்பெனியின் கலைஞராக நியமிக்கப்பட்டார்.

இவரது முதல்பட வாய்ப்பு பாகவதர் நடித்த திருநீலகண்டர் என்று தெரிகிறது. டி ஏ கல்யாணமும் சுதர்சனமும் சேர்ந்து இப்படத்திற்கு இசையமைத்தனர்.

கல்கத்தா, பூனா ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி நஷ்டம் அடைந்த மெய்யப்ப செட்டியார், சிலரது கூட்டணியுடன் சென்னையிலேயே பிரகதி என்ற ஸ்டூடியோ துவங்கினார். இதில் மாதச் சம்பளத்தில் இசை அமைப்பாளராக சேர சுதர்சனத்திற்கு அழைப்பு வந்தது. வாயாடி போலி (1940), பூகைலாஸ்(தெலுங்கு) கரிச்சந்திரா (கன்னடத்திலிருந்து தமிழாக்கம்) போன்ற படங்களுக்கு செட்டியாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இசையமைத்து அவரை கவர்ந்தார் சுதர்சனம்.

சரஸ்வதி ஸ்டோர்ஸில் பணியாற்றி வந்த துறையூர் ராஜகோபால சர்மாவின் பங்களிப்பும் இப்படங்களில் சமமாக இருந்தது. ஆனால் இப்படங்களில் இசையமைப்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. பின்னணி சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்று மட்டுமே பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சபாபதி படத்திலும், சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதன் முதலாக இசையமைப்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த படம் ஏ வி எம்மின் ஸ்ரீ வள்ளி. இதில் முதலில் துறையூர் ராஜகோபால சர்மாவின் பெயரும் அடுத்து சுதர்சனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பின் துறையூர் ராஜகோபால சர்மா ருக்மிணி அவர்கள் நடத்திய கலாக்ஷேத்திராவில் இணைந்தபடியால், சுதர்சனம் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளரானார்.

நாம் இருவர், வேதாள உலகம், ஓர் இரவு ஆகிய படங்கள் சுதர்சனத்தின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தின. ஆனால் ஏ வி எம்மிற்கு புது வாழ்வு தந்த படம் 1949ல் வெளியான வாழ்க்கை ஆகும். இப்படத்தில் செட்டியாரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்தியிலிருந்து இரவல் மெட்டுக்கள் இருந்தாலும் (ட ட டா ட ட டா, எண்ணி எண்ணி பார்க்க மனம்) வைஜயந்தி மாலாவின் மார்வாரி பாணியில் அமைந்த, "கோபாலனோடு நான் ஆடுவேனே" என்ற பாடல் மிகவும் பெயர் பெற்றது.

சுதர்சனத்தின் முழுத்திறமையைக் காட்டிய படம் "பராசக்தி" இதில் அவரது இசையில் பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன. "கா கா கா, ஒ ரசிக்கும் சீமானே, இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம், பூமாலை நீயே, புது பெண்ணின் மனசைத் தொட்டு, தேசம் ஞானம் கல்வி, கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே" போன்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு இன்றளவும் ரசிக்கும்படி அமைந்தன.

இசை மேதை ஜி ராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரைப் போல் இவரும் தனித்தன்மை வாய்ந்த இசையமைப்பாளராக விளங்கினார். பெண் படத்தில் "சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா", "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே" குலதெய்வம் படத்தில் "வெட்கமில்லை வெட்கமில்லை" மாமியார் மெச்சிய மருமகள் படத்தில் "மனமோகனா என்னைப் பாரடா" ஆகிய பாடல்கள் இவர் இரவல் மெட்டுக்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என்று நிரூபிக்கின்றன.

60 களில் திரையுலகில் இசையமைப்பில் மாறுதல் வந்தபோது தன்னையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொண்டார் சுதர்சனம். 1960 "அன்பாலே தேடிய அறிவுச் செல்வம் தங்கம்" தந்த அதே ஆண்டில் களத்தூர் கண்ணம்மாவில் "ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ" போன்ற பாடல்களை அளித்துள்ளார். புதிய கருவிகள் இசையுலகில் அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றை பயன்படுத்த இவர் தயங்கியதில்லை, உதாரணம் செல்லப்பிள்ளையில் வரும் "மதனா, எழில் ராஜா என்ற பாடலில் மாண்டலின் இசைக்கருவியை பயன்படுத்தியிருப்பார்.

பாடலின் கவிதை நயத்தை சிதைக்காமல் இருக்கத்தான் இசை என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் இவரால் அன்னை,நானும் ஒரு பெண் ஆகிய படங்களில் இனிமையான இசை வழங்க முடிந்தது. இவர் என்றுமே சுத்தமான கர்நாடக இசையின் அடிப்படையில் இசையமைத்ததில்லை. மெல்லிசையுடன் இருந்தால்தான் சிறிது இசை நுணுக்கங்களும் இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்பது இவரது கருத்து.

ஏ வி எம்மின் கூட்டுத் தயாரிப்பில் உருவான, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் ஆகிய படங்களில் இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அலையில் வசீகரிக்கப்பட்ட செட்டியாரின் வாரிசுகள் மெல்லிசை மன்னர்களை தங்களது அடுத்த தயாரிப்புகளுக்கு நாடியபோது செட்டியாரால் கூட சுதர்சனத்திற்கு அரணாக விளங்க முடியவில்லை. 1959ல் செட்டியார் தனது சொந்த செலவில் சுதர்சனத்திற்கு வீடு கட்டித் தந்திருந்தார். அவரை பாதி சம்பளத்தில் தொடர்ந்து ஏ வி எம் நிறுவனத்திலேயே பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சுதர்சனம் "நான் இருந்த இடத்தில் இன்னொருவரைப் பார்க்க முடியாது" என்று கூறி, வீட்டையும், நிறுவனத்தையும் விட்டு வெளியேறினார்.

ஏ வி எம்மை விட்டு வெளியே வந்த பிறகும் பூம்புகார், பூமாலை, அன்புக்கரங்கள், கார்த்திகை தீபம், மணிமகுடம், வாலிப விருந்து போன்ற படங்களுக்கு இசையமைத்தார். ஸ்ரீவல்லியில் "காயாத கானகத்தே" என்று பாடலை வழங்கியவர், 20 ஆண்டுகள் ஆகியும், "உன்னை முதன் முதலாக பார்த்தபோது, எண்ணப் பறவை சிறகடித்து, இரவு முடிந்து விடும்" போன்ற பாடல்களை நமக்கு அளித்தார் என்றால் அவரது திறமையைக் குறைவாக எடை போட முடியாது. 1966ல் இவர் இசையமைத்த மணிமகுடம் படத்தின் பாடல்கள் சொல்லும்படி இல்லை, கடைசியாக இவர் வாலிப விருந்து என்ற படத்திற்கு 1967ல் இசையமைத்தார். 

மொத்தமாக இவர் இசையமைத்த படங்கள் "பூகைலாஸ்" என்ற தெலுங்குப் படத்தையும் சேர்த்து 27. படங்கள் இல்லாபோதும் இவருக்கு எவ்வித வருத்தமும் இல்லை. பொழுதுபோக்காக சிலருக்கு வீணை கற்றுக் கொடுத்தார்.

நெடுநாளைய வெற்றிலை-புகையிலைப் பழக்கம், 1990ல் இவரது கல்லீரலைப் பாதித்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆறு மாதம் கழித்து 1991 ல் இவர் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் "மாஸ்டர்" என்று அழைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர், இது யாரும் வழங்கிய விருது அல்ல, திரையுலகினரும் ரசிகர்களும் அன்போடு அவருக்கு அளித்த விருது.

நன்றி: திரு வாமனன் அவர்கள்.

Sunday, July 16, 2017

டி ஜி லிங்கப்பா

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 9. டி ஜி லிங்கப்பா

டி ஜி லிங்கப்பா, 1927 ஆகஸ்ட் 22 அன்று பிறந்தவர். திருச்சியை சேர்ந்தவர்.இவரது தந்தை திரு கோவிந்தராஜுலு நாயுடு ஒரு சங்கீத வித்வான்.அவரது வீட்டிற்கு பாட வரும் எம் கே தியாகராஜ பாகவதரை தனது பிள்ளைகளுக்கு கோவிந்தராஜுலு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார். நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்து வந்த அவர், திருமதி கே பி சுந்தராம்பாள் அவர்களின் குருவும் ஆவார்.

1940ல் அவர்களது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. 14 வயதில் லிங்கப்பா, காமதேனு என்ற திரைப்படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளரான விஸ்வநாதன் என்பவரை அணுகினார்.அதற்கு அவர் அந்தப் படத்தில் பாடும்படும்படியும்,தன் கூடவே இருக்கும்படியும் கூறி விட்டார்.இதில் ஏதும் பலனில்லாமல் போகவே சிறிது காலம் கழித்து அவரிடமிருந்து வெளியேறி மயூரா ஆர்கெஸ்ட்ரா என்ற திரைப்படங்களுக்கு வாசிக்கும் இசைக்குழுவில், ஹார்மோனியம்,மாண்டலின் கிடார் ஆகியவை வாசித்து வந்தார். இவர் அசோக் குமார் என்ற படத்தில் வாத்தியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.

அதே வருடம், லிங்கப்பா ஜெமினி ஸ்டுடியோவை வாய்ப்புக்காக அணுகினார். அப்போது சி ராமச்சந்திரா அங்கு இருந்தார். ஆனால் லிங்கப்பா வயதில் மிகவும் இளையவராக இருந்ததால் நிராகரிக்கப்பட்டார். பிறகு சேலம் சென்று மாடர்ன் தியேட்டர்ஸில் வாய்ப்பு தேடினார். அங்குதான் அவர் கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா போன்றோரை சந்தித்தார்.

1947ல் காரைக்குடி சென்று நாம் இருவர் படத்திற்கு வாசித்தார். பின்னர் 1948 ல் சென்னை திரும்பி சி ஆர் சுப்பராமன் அவர்களிடம் உதவியாளராக பணி புரிந்தார். இவ்வாறு பலதரப்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்த அனுபவும் இவருக்கு ஃப்ரீலேன்ஸ் இசையமைப்பாளராக பணிபுரியும் எண்ணத்தை அளித்தது. இவர் லண்டன் சென்று நவீன இசைக்கருவிகளை வாங்கி வருவார். அவ்வாறு வாங்கி வந்த எலெக்ட்ரிக் கிடாரை இவர் ஜி ராமநாதன், எஸ் வி வெங்கட்ராமன், கே வி மகாதேவன் போன்றோரின் இசையில் வாசித்துள்ளார்.

டி ஆர் மகாலிங்கம் தனது சொந்தத் தயாரிப்பில் மச்சரேகை என்ற படம் தயாரித்தார். இதன் இசையமைப்பாளர் திரு சி ஆர் சுப்பராமன். இவர் திடீரென்று இறந்து விடவே, தனது இரண்டாம் படமான மோகனசுந்தரம் என்ற படத்தில் டி ஜி லிங்கப்பாவை அறிமுகப் படுத்தினார். இருவருக்கும் நாம் இருவர் படத்திலிருந்தே நெருக்கமானநட்பு இருந்து வந்தது. இப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றன. இப்படத்தில்தான் சந்திரபாபு முதலில் "ஹலோ மை டியர் டார்லிங், ஹலோ மை ரோஸ் சார்மிங்" என்ற பாடலைப் பாடினார். இப்படம் வெளி வரவில்லை. டி ஆர் மகாலிங்கமும், லிங்கப்பாவும் ஆழ்ந்த கர்நாடக இசையறிவு கொண்டிருந்ததால் ஒருவரை ஒருவர் அனுசரித்து, இசையைப் பற்றி கலந்துரையாடி பாடல்களை அமைத்தனர். தனது அடுத்த இரண்டு படங்களான, சின்னதுரை, விளையாட்டு பொம்மை ஆகிய படங்களுக்கும் மகாலிங்கம் இவருக்கே வாய்ப்பளித்தார்.

பி ஆர் பந்துலு டி ஆர் மகாலிங்கத்திடம் உதவியாளராக இருந்தார். அவரிடமிருந்து பிரிந்து சென்று அவர் தனது முதல் படமான கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தயாரித்தபோது திரு டி ஜி லிங்கப்பாவையே இசையமைப்பாளராக நியமித்தார். ப நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், "வெண்ணிலாவும் வானும் போலே" என்ற பாராதிதாசன் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலுக்கு முதலில் இசை வடிவம் அளித்தவர் திரு எம் எம் தண்டபாணி தேசிகர். அவரிடம் லிங்கப்பா அவர்கள் அனுமதி பெற்று, பிறகு திரு பாரதிதாசனிடமும் இப்பாடலை போட்டுக் காட்டி அவர் ஒப்புதல் அளித்த பின்னரே, சிறு மாற்றங்களுடன் இப்படத்தில் சேர்த்தார். இப்படத்தில் சிவாஜி கணேசனுக்காக "ஜாலி லைஃப், ஜாலி லைஃப்" என்ற பாடலை சந்திரபாபு பாடியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெற்றியடையவே, பந்துலு லிங்கப்பாவை தனது அடுத்த படமான முதல் தேதிக்கும் இசையமைப்பாளராக நியமித்தார் 
Image may contain: 1 person

அடுத்து இவருக்கு பெர்யர் வாங்கித் தந்த படம் "தங்கமலை ரகசியம்". இப்படத்தில் வரும் "அமுதைப் பொழியும் நிலவே" பாடல் பி சுசீலா அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு ,சென்றது. இதன் ஹிந்தி மொழியாக்கத்திலும் இப்பாடலுக்கு இதே மெட்டு பயன்படுத்தப்பட்டு, ஹிந்தி திரையுலகில் பெரும்பெயர் பெற்றது.

லிங்கப்பா தொடர்ந்து, சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் கன்னடப் படங்களுக்கு இசையமைக்க சென்று விட்டார். மறுபடியும் 1964ல் பி ஆர் பந்துலு இவரை முரடன் முத்து படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பளித்தார். (இதுதான் சிவாஜி-பந்துலு இணைந்து பணிபுரிந்த கடைசி படம். எதற்காகப் பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. முரடன் முத்து நவராத்திரி - எது 100 ஆவது படம் என்ற பிரச்சினையினாலா?) அடுத்து இவர் தாயின் மேல் ஆணை (1966), தங்கமலர் (1969), கடவுள் மாமா (1974) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். கடவுள் மாமா படம்தான் இவர் கடைசியாக பணியாற்றிய தமிழ்ப் படம்.

இவரது இசையில் பாடிய பாடகர்-நடிகர்கள்:
எம் எம் தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், கே ஆர் ராமசாமி, யூ ஆர் ஜீவரத்தினம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், ஜே பி சந்திரபாபு போன்றோர்.

இவரது இசையில் பாடிய பின்னணிப் பாடகர்கள்:
டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், வி என் சுந்தரம், எஸ் சி கிருஷ்ணன், எம் எல் வசந்தகுமாரி, பி லீலா, ஜிக்கி, டி வி ரத்தினம், ஏ பி கோமளா, ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, கே ஜமுனாராணி, பி சுசீலா, கே ராணி, எஸ் ஜானகி போன்றோர்.

இவரது இசையமைப்பில் சில பிரபல பாடல்கள்:
ஓ, ஜெகமத்தில் இன்பம் - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம் , எஸ் வரலக்ஷ்மி)
பாட்டு வேணுமா - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம்)
அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் (பி சுசீலா)
தென்றலே வாராயோ, இன்ப சுகம் தாராயோ- வாழ்விலே ஒரு நாள் (டி எம் சௌந்தரராஜன், யூ ஆர் ஜீவரத்தினம்)
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (என் எஸ் கிருஷ்ணன்)
வெண்ணிலாவும் வானும் போலே - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (ராதா ஜெயலக்ஷ்மி)
அதிமதுரா அனுராகா - எங்கள் குடும்பம் பெருசு (ஏ எம் ராஜா, கே ஜமுனாராணி)
ராதா மாதவ வினோத ராதா - எங்கள் குடும்பம் பெருசு (டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா)
சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா (TMS, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவர் குரலிலும்)
கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா (டி ஏ மோதி - பி சுசீலா)
என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் (TMS)

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே என்ற பாடலை இவர் இசையமைக்க சந்திரபாபு இவரிடம் அதைக் கற்றுக் கொண்டு பிறகு மரகதம் படத்தில் பாடியதாகவும், புத்தம்புது மேனி என்ற பால முரளி கிருஷ்ணா - பி சுசீலா பாடலும் இவர் இசையமைப்பில் உருவாகி பின்னர் சுபதினம் படத்தில் இடம் பெற்றதாகவும் கூறுவார்கள்.

இவர் 5 ஃபிப்ரவரி 2000, அன்று இயற்கை எய்தினார்.

குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் அத்தனையும் நன்முத்துக்கள்.

Thursday, July 13, 2017

வி தக்ஷிணாமூர்த்தி - எஸ் தக்ஷிணாமூர்த்தி

தமிழ்த் திரை இசையின் பிதாமகர்கள் - 8.
வி தக்ஷிணாமூர்த்தி - எஸ் தக்ஷிணாமூர்த்தி 

தென்னியத் திரையுலகில் இரு மூர்த்திகளின் கீர்த்தியும் சிறந்து விளங்கிய காலம் அது. ஆனால் ஒருவர் இசையை மற்றவரது என்று குழப்பியும் கொள்வார்கள் பலர். இன்றும் ரசிகர்கள் சிலர் இவர்களது பாடலை மற்றவர் பெயரில் பதிவிடுகிறார்கள். இந்தக் குழப்பம் தீரவே நான் இருவரைப் பற்றியும் ஒரே கட்டுரையில் எழுதுகிறேன்.

வி தக்ஷிணாமூர்த்தி. உண்மையிலேயே பிதாமகர். "ஸ்வாமிகள்" என்றே மலையாள இசையுலகில் இவரை அழைப்பர்.

பத்து வயதாயிருந்தபோது, திருவனந்தபுரத்திலிருக்கும் வெங்கடாசலம் பொட்டி என்பவர் அவருக்கு கர்நாடக இசையில் பயிற்சி அளித்தார். இவருடைய முதல் பொது நிகழ்ச்சி 13 வயதில் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்றது. ஒரு நாள் நள்ளிரவில் பெருமழையில், கஞ்சிரா வித்வான் கடுவ கிருஷ்ணன் இவரது வீட்டிற்கு வந்து மறுநாள் காலையில் வைக்கத்தில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கச்சேரி செய்ய வேண்டும் என்று இவரை அழைத்தார். இவரது தாயார் அனுமதி தரவே இருவரும் உடனே புறப்பட்டு கால்நடையாக கருமாடி படகுத்துறை அடைந்து அங்கிருந்து மறுநாள் காலை 8 மணிக்கு வைக்கம் சென்றடைந்தனர். பின்னர் குளித்து முடித்து வைக்கத்தப்பனை தரிசித்து விட்டு கச்சேரி செய்யும் இடத்தை அடைந்து கச்சேரி செய்தனர்.

கொச்சியை சேர்ந்த தவில் வித்வான் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி வைக்கத்தில் தங்கி தனது உறவினர்களுக்கு கர்நாடக இசை பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் அவர் வைக்கத்தில் தங்கினார். தினமும் காலையிலும் மாலையிலும் அன்னதானப் பிரபு வைக்கத்தப்பாவை துதி செய்யாமல் இருந்ததில்லை.இவருடைய 42 மாத வைக்கம் வாழ்வில் தினமும் வைக்கத்தப்பன் கோவிலில் பாடியும், நிர்மால்ய தரிசனம் செய்தும் வந்தார். 

1942ல் இவர் மதராசிற்கு ஆல் இந்தியா ரேடியோவில் பாடுவதற்கு வந்தார். பிறகு அடிக்கடி மதராசிற்கு பாட வர நேர்ந்தது. 1948ல் மைலாப்பூரில் தங்கி விட்டார். பாலக்காட்டில் வசித்த 4 வருடங்களைத் தவிர, மதராஸ்தான் இவரது உறைவிடமாக இருந்தது.பிரபல கர்நாடக பாடகி திருமதி என் சி வசந்தகோகிலம் இவரது சிஷ்யையாவார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.மொத்தத்தில் இவர் தமிழில் 9 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அவற்றுள் சில:

நல்லதங்காள் திரைப்படம், நந்தா என் நிலா, ஆசை மகன், தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா"), ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்றவை.

இவரது புகழ்பெற்ற சில பாடல்கள்.
நந்தா நீ என் நிலா - நந்தா என் நிலா 
நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
ஆண்டவன் இல்லா உலகமிது - ஒரு ஊதாப்பூ " "
அருவிமகள் அலையோசை - ஆசைமகன் 
தேவி ஸ்ரீதேவி, தேடியலைகின்றேன் - தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா")
முத்து முத்துப் புன்னகையே - ஒரு கோவில் இரு தீபங்கள்.

இதில் நந்தா என் நிலா என்ற பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தமிழ்த் திரைப்பாடல்களியே மிக நீண்ட பல்லவியுடைய பாடல் இது ஒன்றுதான்.

இவர் பல விருதுகள் பெற்றிருந்தபோதிலும் தமிழக அரசு இவரை உரிய விதத்தில் கௌரவிக்கவில்லை என்பது ஒரு வருத்தமே.

ஆகஸ்ட் 2, 2013 அன்று தனது 94ஆவது வயதில் காலமானார். இவரது இழப்பு மலையாள திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.


எஸ். தக்ஷிணாமூர்த்தி.

நவம்பர் 11, 1921ஆம் ஆண்டு, ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ப்டீகப்பள்ளி என்ற ஊரில் பிறந்தார். இவரது பட்டனர் திரு தட்சிணாமூர்த்தி சாஸ்திரிகள், ஒரு தலைசிறந்த கர்நாடக இசை வல்லுநர். அவரிடம் இசை பயில மாணவர்கள் பல இடங்களிலிருந்தும் வருவர். அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு சிறுவன் தக்ஷிணாமூர்த்தி தனது சிறு வயதிலேயே ஒரு இசை மேதையாக விளங்கினார். 9 வயதிலேயே மசிலிபட்ணத்தில் நடைபெறும் 9 நாள் நவராத்திரி உற்சவத்திற்கு பல இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார்.

1983ல் HMV நிறுவனத்தில் ஹார்மொனியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். வி தட்சிணாமூர்த்தி சுவாமிகளைப் போலவே இவரும் ஆ்ல் இந்தியா ரேடியோவில் பணியாற்றியுள்ளார். டெல்லி நிலையத்தில் இவரை, தென்னிந்திய இசையின் இயக்குனராக பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தனர் என்றால் இவரது திறமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவரும் மதராசில் மயிலாப்பூரில் தங்கி இருந்தார்.
Image may contain: 1 person, sitting

முதல் முதலாக திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு சம்சாரம் என்ற படத்திற்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படம். 

இவரும் மிகக் குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழில் இசையமைத்த படங்கள்.:
சம்சாரம் - 1950
சர்வாதிகாரி - 1951
வளையாபதி - 1952
கல்யாணி - 1952
வேலைக்காரி மகள் - 1953
மங்கையர் திலகம் - 1955
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
யார் பையன் - 1957
பாக்யவதி - 1957
பங்காளிகள் - 1961 போன்றவை. இது தவிர, லைலா மஜ்னு தெலுங்குப் படத்தில் ஒரு பாடலும் சர்வாதிகாரி படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

இவர் இசையில் சில புகழ் பெற்ற பாடல்கள்:
சம்சாரம் சம்சாரம் - சம்சாரம் 
சர்வாதிகாரி - கண்ணாளன் வருவான் 
வளையாபதி - குலுங்கிடும் பூவிலெல்லாம் (பாரதிதாசன்)
கல்யாணி - இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நம் உலகிலே 
மங்கையர் திலகம் - நீலவண்ணக் கண்ணா வாடா, நீ வரவில்லையெனில் ஆதரவேது 
அலிபாபாவும் 40 திருடர்களும் - அனைத்துப் பாடல்களும் 
யார் பையன் - சுயநலம் பெரிதா, பொது நலம் பெரிதா 
பாக்யவதி - பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்...இந்தக்கால 
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்... 

என் டி ராமராவிற்கு இவர் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். தனது தயாரிப்பில் "ஸ்ரீமத் விராட பருவம்" (1983), ஸ்ரீமத் பொட்டுலூரி வீரப்ரம்மேந்திர சரிதா" (1984) ஆகிய இரு படங்களுக்கும் இவரை பணியாற்ற அழைத்தார். அந்நாளில் இவ்விரு படங்களும் சிறந்த "MUSICAL HIT" ஆக விளங்கின. 

இவரது திரை வாழ்க்கை இவரது உடல்நலக் குறைவினால் விரைவிலேயே பாதிக்கப்பட்டது. நீரிழிவினால், தனது கண்களின் பார்வை ஒன்றினை 1972ல் இழந்தார். அடுத்த கண் பார்வையையும் 1987ல் இழந்தார்.

இவர் தனது சென்னை இல்லத்தில் ,ஃபிப்ரவரி 9, 2012 ல், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் இறந்தார். மருத்தவமனை எடுத்து செல்ல வேண்டாம், வீட்டிலியே இறக்க விரும்புகிறேன் என்ற இவரது கடைசி ஆசையின்படி ஆம்புலன்ஸ் வருவதற்கு 5 நிமிடம் முன்பே உயிர் துறந்தார்.

சமகாலத்தவரான இருவரும் தங்களது பாரம்பரிய இசையினை தக்க வைத்துக் கொண்டு, திரை இசைக்கு தொண்டாற்றினார். இவர்களது பங்களிப்பு மற்றவர்களை விட குறைவாக இருந்தாலும், தரத்திலும், அழியாப் புகழிலும் முன்னிலை வகிக்கின்றன. இவ்விருவரது இசைத் திறமைக்கும் எனது இக்கட்டுரை சமர்ப்பணம்.

புகைப்படங்கள்: 1. வி தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள். 
2. எஸ் தக்ஷிணாமூர்த்தி அவர்கள்

Monday, July 10, 2017

டி ஆர் பாப்பா

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்#: 7

டி ஆர் பாப்பா. இவரது இயற்பெயர் சிவசங்கரன். சிறுவயதிலிருந்தே வயலினில் சிறந்த பயிற்சி பெற்றவர். தனது ஆரம்ப நாட்களில் மாடர்ன் தியெடர்ஸிலும், ஜூபிடர் பிக்சர்ஸிலும் வயலின் வாசித்து வந்தார். இவரும் திரு டி கே ராமமூர்த்தியும்தான் அந்தக் காலத்தில் அதிக ஊதியம் பெற்ற வயலின் கலைஞர்களாக இருந்தார்கள்.

1946 லிருந்து ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வானாக பணியாற்றினார். அக்காலத்தில் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் நிறைய பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவற்றில் ஒன்று "சின்னஞ்சிறு பெண்போலே, சித்தாடை உடை உடுத்தி" என்ற பிரபலமான பாடல்.

1952 ல் முதல் முதலில் "ஆத்மசாந்தி" என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சிட்டாடல் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு வழங்கினார். பிறகு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மல்லிகா, விஜயபுரி வீரன், விளக்கேற்றியவள், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.

டி ஆர் பாப்பாவும் டி ஆர் ராமண்ணாவும் வகுப்புத் தோழர்கள். ராமண்ணா அவர்கள் அருணகிரிநாதரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரு ஜி ராமநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் திரு டி ஆர் பாப்பாவை மீதியுள்ள பாடல்களுக்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 70 வரையில் இவர்களது கூட்டணியில் பல படங்கள் வந்தன.

தமிழ் இசை சங்கம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeup

இவரது இசையில் வெளி வந்த சில பிரபல பாடல்களும் அவற்றின் படங்களும்.
எண்ண எண்ண இன்பமே வாழ்வினில் எந்நாளும் - அன்பு;
சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல்
பகவானே மௌனம் ஏனோ - ரம்பையின் காதல்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே - மல்லிகா
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் - மல்லிகா
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - குறவஞ்சி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - நல்லவன் வாழ்வான்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம்
முத்தைத்தரு பத்தித்திரு - அருணகிரிநாதர்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமாரராஜா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
ஆசை பொங்கும் அழகு ரூபம் - ஆசை
சூடிக் கொடுத்தவள் நான் தோழி - டீச்சரம்மா
தலைவாரிப் பூச்சூடி உன்னை - ரங்கோன் ராதா
இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
உள்ளத்திலே உரம் வேண்டுமடா - விஜயபுரி வீரன்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - அவசரக் கல்யாணம்.

இவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவர்களது இசையில் வந்த பாடல்களை கேட்கும்போது, இவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...