Monday, July 10, 2017

டி ஆர் பாப்பா

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்#: 7

டி ஆர் பாப்பா. இவரது இயற்பெயர் சிவசங்கரன். சிறுவயதிலிருந்தே வயலினில் சிறந்த பயிற்சி பெற்றவர். தனது ஆரம்ப நாட்களில் மாடர்ன் தியெடர்ஸிலும், ஜூபிடர் பிக்சர்ஸிலும் வயலின் வாசித்து வந்தார். இவரும் திரு டி கே ராமமூர்த்தியும்தான் அந்தக் காலத்தில் அதிக ஊதியம் பெற்ற வயலின் கலைஞர்களாக இருந்தார்கள்.

1946 லிருந்து ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வானாக பணியாற்றினார். அக்காலத்தில் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் நிறைய பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவற்றில் ஒன்று "சின்னஞ்சிறு பெண்போலே, சித்தாடை உடை உடுத்தி" என்ற பிரபலமான பாடல்.

1952 ல் முதல் முதலில் "ஆத்மசாந்தி" என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சிட்டாடல் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு வழங்கினார். பிறகு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மல்லிகா, விஜயபுரி வீரன், விளக்கேற்றியவள், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.

டி ஆர் பாப்பாவும் டி ஆர் ராமண்ணாவும் வகுப்புத் தோழர்கள். ராமண்ணா அவர்கள் அருணகிரிநாதரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரு ஜி ராமநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் திரு டி ஆர் பாப்பாவை மீதியுள்ள பாடல்களுக்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 70 வரையில் இவர்களது கூட்டணியில் பல படங்கள் வந்தன.

தமிழ் இசை சங்கம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeup

இவரது இசையில் வெளி வந்த சில பிரபல பாடல்களும் அவற்றின் படங்களும்.
எண்ண எண்ண இன்பமே வாழ்வினில் எந்நாளும் - அன்பு;
சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல்
பகவானே மௌனம் ஏனோ - ரம்பையின் காதல்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே - மல்லிகா
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் - மல்லிகா
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - குறவஞ்சி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - நல்லவன் வாழ்வான்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம்
முத்தைத்தரு பத்தித்திரு - அருணகிரிநாதர்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமாரராஜா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
ஆசை பொங்கும் அழகு ரூபம் - ஆசை
சூடிக் கொடுத்தவள் நான் தோழி - டீச்சரம்மா
தலைவாரிப் பூச்சூடி உன்னை - ரங்கோன் ராதா
இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
உள்ளத்திலே உரம் வேண்டுமடா - விஜயபுரி வீரன்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - அவசரக் கல்யாணம்.

இவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவர்களது இசையில் வந்த பாடல்களை கேட்கும்போது, இவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...