Wednesday, June 14, 2017

ஜி ராமநாதன்

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# – 4. – G ராமநாதன்

ஜி. ராமநாதன் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார் கோயில் என்ற இடத்தில் பிறந்தவர். ராமநாதன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது 18-வது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்னணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932-ல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிஷி என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக ஒரு இசைக்கருவியை இசைத்தார்.

1938-ல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்துள்ளார்.

இசை வாழ்க்கை
ஜி. ராமநாதன் அவர்கள் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை ஆனாலும் கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார். இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன, ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.

இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்கு சமமாக கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே. தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படத்தில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என்கிற பாடலுக்கு இவர் அமைத்த இசை. இவர் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இசையே நிலைத்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராயிருந்தார். இதற்கேற்றார்போல இவர் இசையமைத்த பாடல்கள் Semi-Classic என்னும் கர்நாடக இசையின் வகையிலேயே இருந்தன..

ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தி திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது. எம். கே. தியாகராஜ பாகவதரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால்தான் தரமுடியும் என்பார் ஜி ஆர், அவரே ஒரு நல்ல பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார். பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாக பாடலாம் என்று கூறியுள்ளார்..
Image may contain: 1 person, closeup

தன்னுடைய இசையில் பாடலை பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படி பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசி படம் தெய்வத்தின் தெய்வம். அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த போது மாரைடைப்பால் இறந்தார் பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அதை பூர்த்தி செய்தார்.

இவர் இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர்,M M தண்டபாணி தேசிகர், கொத்தமங்கலம் சீனு, M S சுப்புலக்ஷ்மி, D K பட்டம்மாள், M L வசந்தகுமாரி, P U சின்னப்பா, U R ஜீவரத்தினம், N C வசந்தகோகிலம், T R மகாலிங்கம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், T S துரைராஜ், J P சந்திரபாபு ஆகியோர்

இவர் இசையில் பாடிய பின்னணி பாடகர்கள்:
T M சௌந்தரராஜன், A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், C S ஜெயராமன், V N சுந்தரம், T A மோதி,
P B ஸ்ரீனிவாஸ், P லீலா, A P கோமளா, R பாலசரஸ்வதி தேவி,
T V ரத்தினம், ராதா ஜெயலக்ஷ்மி, M S ராஜேஸ்வரி ,T S பகவதி, ஜமுனா ராணி, P சுசீலா, A V ரத்தினமாலா, N L ஞானசௌந்தரி,, K ராணி, K V ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி, S ஜானகி, L R ஈஸ்வரி போன்றோர்

இவரது புகழ் பெற்ற சில பாடல்களும் அவற்றின் படங்களும்:
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து - சிவகவி
மன்மத லீலையை வென்றார் உண்டோ, கிருஷ்ணா முகுந்தா முராரே, அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன் - ஹரிதாஸ்
சின்னப் பெண்ணான போதிலே - ஆரவல்லி
வாராய், நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே -
மந்திரி குமாரி
ஜீவபிரியே ஷ்யாமளா என் ஜீவபிரியே ஷ்யாமளா - ஷ்யாமளா
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே, குரங்கிலிருந்து பிறந்தவன், ஏறாத மலைதனிலே - தூக்கு தூக்கி
மல்லிகப் பூ ஜாதி ரோஜா - கோமதியின் காதலன் 
ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
வாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம்
சிந்தனை செய் மனமே, மாசிலா நிலவே நம் - அம்பிகாபதி
ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்காமுடி
முல்லைமலர் மேலே, யாரடி நீ மோகனி - உத்தம புத்திரன்
சிங்காரக் கண்ணே, இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் (அனைத்து பாரதியார் பாடல்களும்)
போன்ற சில.

இவரது பாடல்கள் பட்டியல் மிக நீண்டது. அவற்றில் சில மட்டுமே இங்கு தர முடிந்தது. கர்நாடக இசையின் அடிப்படையில் இவர் இசையமைத்ததினால் இவரது அனைத்துப் பாடல்களும் சிறந்து விளங்கின.

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...