#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# – 5 சி.ஆர். சுப்பராமன்.
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி
இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா
இசையமைப்பாளர் எம் எஸ் தக்ஷிணாமூர்த்தி
இசையமைப்பாளர் ஆர் கோவர்தனம்
இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ்
தெலுங்கில் இசையமைப்பாளராக திரு மாண்டலின் ராஜு
தெலுங்கில் முடிசூடா மன்னராக விளங்கிய திரு கண்டாசாலா
இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய பெருமை மறைந்த இசை மேதை திரு சி ஆர் சுப்பாராமன் அவர்களையே சாரும்.
1940களில் தமிழ் திரையிசையில் மேற்கத்திய இசையின் தாக்கத்திற்கு பதியம் போட்டவர் சி.ஆர். சுப்பராமன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்ததி, டி.ஜி.லிங்கப்பா, கண்டசாலா, கோவர்த்தனம் போன்றவர்களின் குரு இவர்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அந்தக் காலத்தில் ஆரம்பித்து வைத்த போக்குதான் இந்தக் காலத்திலும் தொடர்கிறது..அந்தக் காலத்திலேயே இவர் துணிந்து லத்தீன் அமெரிக்க இசையை புகுத்தி இசையமைப்பில் சில மாறுதல்களை கொண்டு வந்தார்.
தனது 16ஆம் வயதில் ஜி ராமனாதனின் சகோதரர். சுப்பைய்யா பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் HMV நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராக வேலையிலமர்ந்தார். இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடும், பக்தியும் விரைவிலேயே இவரை HMVயில் துணை இசை அமைப்பாளராக உயர்த்தின
இரவுகளில் சுப்பராமன், பணி முடிந்ததும், ஒரு இளைஞரை வயலின் வாசிக்க சொல்லிவிட்டு கீர்த்தனைகளை பாடுவார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல. T K ராமமுர்த்தி அவர்கள்தான். அவரை HMV யில் நிரந்த வேலைக்கு அமர்த்திவிட்டு தனது உதவியாளராகவும் நியமித்தார்..

.
தனது 10 ஆண்டு திரை வாழ்க்கையில் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவையாக அமைந்தன. தேவதாஸ், லைலா மஜ்னு போன்ற புகழ் பெற்ற படங்கள் இவர் இசையமைப்பில் வெளியாயின.
இவர் இசையமைப்பில் பாடிய பாடக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர், P U சின்னப்பா, C S R ஆஞ்சநேயலு, U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K. R. ராமசாமி, V. நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், S வரலக்ஷ்மி போன்றோர்.
இவர் இசையமைப்பில் பாடிய பின்னணி பாடகர்கள்:
கண்டசாலா, A M ராஜா, திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T. A மோதி, M L வசந்தகுமாரி P A பெரியநாயகி, P லீலா, T V ரத்தினம், R பாலசரஸ்வதி தேவி, A P கோமளா, K ஜமுனா ராணி, K V ராணி ஆகியோர்
இவர் இசையமைப்பில் வெளிவந்த சில படங்கள்:
அபிமன்யு, ராஜ முக்தி, ரத்ன குமார், லைலா மஜ்னு, வேலைக்காரி, நல்ல தம்பி, கன்னியின் காதலி, ஸ்வப்ன சுந்தரி, மர்மயோகி, மணமகள், மருமகள், சண்டிராணி, தேவதாஸ் போன்றவை .
இவரது வெற்றி பாடல்கள் சில:
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ - பாகவதர் - ராஜமுக்தி
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே - வேலைக்காரி
வான்மீதிலே இன்பத்தேன் மாறி பெய்யுதே - சண்டிராணி
எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி - லைலா மஜ்னு
எல்லாம் இன்பமயம் - மணமகள்
சின்னஞ்சிறு கிளியே - மணமகள்
தேவதாஸின் அனைத்துப் பாடல்களும்
உலகே மாயம், சின்னஞ்சிறு கிளியே, துன்பம் நேர்கையில் போன்ற அழியாப் பாடல்களைத் தந்த சி.ஆர். சுப்பராமன் 28 வயதிலேயே இவ்வுலகை விட்டு நீங்கினார். இவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும்
இவரது புதல்வர் திரு Kannan Latha AravindKanna Composer திருச்சியில் இசைப்பள்ளி வைத்து லண்டனிலுள்ள ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் ம்யூசிக், தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சிளிக்கிறார்.