Monday, August 14, 2017

ஆர் கோவர்த்தனம்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 13: ஆர் கோவர்த்தனம். 

சுதர்சனம் மாஸ்டரின் தம்பி. அபார ஸ்வர ஞானம் உடையவர். இவரது பாடல்கள் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல். குறிஞ்சிப் பூ போன்று அரிதாக இசை அமைத்தவர், ஆனால் அத்தனையும் ரத்தினங்கள்.

தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டரின் பாடல்களை கிராமபோனுக்காக, சர்மா சகோதரர்கள் "மயூரா ஃபிலிம் ஆர்கெஸ்டிரா" மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பாகவதரே மீண்டும் பாடிக் கொண்டிருந்தார். இதை அந்த இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் ஒருவரின் 10 வயது தம்பி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். மதிய உணவு வேளையில் பியானோவின் கட்டைகளை ஒரே கையால் இயக்கி பாகவதர் பாடிய "உன் அழகைக் காண இரு கண்கள் போதாதே" என்ற பாடலை வாசித்தான். அதைக் கேட்ட சர்மா "எங்கே இதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்றவுடன் அந்த சிறுவன் கட கட என்று ஸ்வரங்களை ஒப்புவித்தான். அவனது அண்ணனுக்கே படு ஆச்சரியம்.

அதே வருடம் இன்னொரு நாள் ஏ வி மெய்யப்ப செட்டியார் தன நண்பர்களுடன் அமைத்திருந்த பிரகதி ஸ்டுடியோவில் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் படப் பாடலின் ஒலிப்பதிவு. முன்பு குறித்த ஹார்மோனிஸ்ட் அங்கும் பணியாற்றிக் கொண்டிருந்தார். உடன் அவரது தம்பியும் வந்திருந்தான். 

"இவன் என் தம்பி, என்ன பாடினாலும் ஸ்வரங்களை அப்படியே ஒப்பித்துவிடுவான்" என்று ராஜத்தினம் பிள்ளையிடம் கூறினார் அந்த ஹார்மோனிஸ்ட். "அப்படியா, எங்கே நான் வாசிப்பதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்று சொல்லி தனது நாதஸ்வரத்தில் தோடி ராகத்தை வாசித்தார். அந்த சிறுவன் ஒரு காகிதத்தில் அதன் ஸ்வரக்கோர்வையை அப்படியே எழுதி பிள்ளையிடம் தந்தான். அதைக் கண்ட பிள்ளை ஆசாரியத்துடன் " இவனுக்கு ஸ்வரக்குட்டி என்று பெயர் வையுங்கள். அபார ஞானம் உள்ளவன்" என்று அவனுக்கு ஒரு புதியதொரு பெயர் சூட்டினார்.

அந்த ஹார்மோனிஸ்ட்தான் பின்னாளில் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய ஆர் சுதர்சனம். அவரது தம்பிதான் ஆர் கோவர்த்தனம்.

ஏ வி எம்மின் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் மும்முரமாக ஆர் சுதர்சனம் ஈடுபட்டிருந்ததால் அவரது தம்பியை செட்டியார் கிராமபோன் இசைக்குழுவிற்கு இசையமைப்பாளராக நியமித்தார் . ஆனால் 1953 ல் திரைப்படங்களுக்காக ஒளிப்பதிவு செய்த பாடல்களையே எடிட் செய்து இசைத்தட்டில் பதிவு செய்யும் முறை வந்து விட்டது. ஆகையால் தனியாக இன்னொருமுறை பதிவு செய்யும் முறை முடிவடைந்தது. ஆனால் கோவர்த்தனத்தை இழக்க செட்டியார் விரும்பவில்லை. அவரது அண்ணனுக்கு உதவியாக அவரை அமர்த்தினார். சில படங்கள் மிகவும் சீக்கிரமாக வெளிவர வேண்டிய சந்தர்ப்பங்களில் அண்ணனும் தம்பியுமாக ஆளுக்கொரு ரீலைப் பிரித்துக் கொண்டு பின்னணி இசையை செய்து முடிப்பார்களாம்.

ஏ வி எம்மின் தலைமை மேலாளராக இருந்த வாசுதேவ மேனன், தான் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கோவர்த்தனத்திற்கு அளித்தார். பிரேம் நசீரை கதாநாயகனாக வைத்து "ஒரே வழி" என்ற படத்தில் "ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி" என்ற கண்ணதாசன் பாடலுக்கு கோவர்த்தனம் இசையமைத்தார். அவரது திறமையை உணர்ந்த மேனன், தனது அடுத்த படமான "கைராசி" படத்திலும் கோவர்த்தனத்தை இசையமைப்பாளராக ஆக்கினார். இதன் பாடல்களும் படமும் பெரிய வெற்றி.



அடுத்து "பட்டணத்தில் பூதம்" கண்ணதாசன் தயாரிக்கத் துவங்கி பின்னர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த படம். அந்தப் படப் பாடல்களும் பெரும் வெற்றி. 

"மெட்டுப் போட்டபின் பாடலை எழுத சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்திற்கும் முதல் பாடல்தான் எழுதப் பட்டது. வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டால்தான் பாடல் உணர்வுபூர்மாக இருக்கும். அதனால்தான் எனது பாடல்கள் வெற்றியடைந்தன" என்றுகூறுவார் கோவர்த்தனம். ஒரே ஒரு முறை மெட்டுப் போட்டுவிட்டு பாடலை எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கஜல் பாணியில் ஒரு மெட்டுப் போட, அதற்கு கண்ணதாசனின் வரிகள் ஏற்றதாக அமையவில்லை. ஆனால் கண்ணதாசனின் பாடல் வரிகளின் சிறப்பை உணர்ந்த கோவர்த்தனம் தயாரிப்பாளரிடம், மெட்டை செமி கிளாசிகலாக மாற்ற அனுமதி பெற்று பிறகு வேறு மெட்டு அமைத்தார். அந்தப் பாடல்தான் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி"

"வாய்ப்புகளைத் தேடி நான் என்றும் அலைந்ததில்லை. என்னைத் தேடி வந்தவர்களுக்கு மட்டும் நான் இசையமைத்தேன்" என்று கூறுவார் கோவர்த்தனம். அதனால்தான் அவருக்கு படங்கள் குவியவில்லை. மாறாக இசையமைப்பாளர்கள் இவரது உதவியை நாடினார்கள். அதற்கு காரணம் அவருடைய அசாத்தியத் திறமை, அனைவருடனும் சுமுகமாகப் பழகும் எளிமை.

திரை இசை மேதை சுப்பராமன், சுதர்சனம் போன்றோரிடம் உதவியாளாராக இருந்த கோவர்த்தனம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசைக்குழுவின் கண்டக்டராக இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பிரிந்த பின்னும், 1970 வரை விஸ்வநாதனிடம் பணிபுரிந்தார். பிறகு 1976 முதல் 90 வரை இளையராஜாவிடம் பணியாற்றினார். இறுதியாக தேவாவிடம் பணியாற்றினார். "தேவா ஒருவர்தான் என்னை மதித்து என்னுடைய சொல்படி நடக்கிறார்" என்பார் கோவர்த்தனம்.

50 ஆண்டுகளாக திரைப்பட இசையுடன் நேரடித் தொடர்பு உடைய கோவர்த்தனம் திரை இசை போக்குகளைக் குறித்து ஆழமான பார்வை உடையவர். ராமநாதன் கர்நாடக சங்கீதத்தை மக்கள் விரும்பும் வகையில் அளித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இந்துஸ்தானி இசையின் மேருகுகளைக் கூட்டினார். இளையாராஜாவின் இசை பாமரர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, பின்னர் கம்ப்யூட்டர் வந்தவுடன் அவரது இசையின் போக்கு மாறி விட்டது என்று கூறுகிறார் கோவர்த்தனம்.

இவர் இசையமைத்த படங்கள்:
ஒரே வழி -1959
கைராசி - 1960
பட்டணத்தில் பூதம் - 1967
பூவும் பொட்டும் - 1968
பொற்சிலை - 1968
அஞ்சல் பெட்டி - 1969
வரப்பிரசாதம் 1975

இவர் இசையில் பிரபலமான பாடல்கள்:
காத்திருந்தேன் காத்திருந்தேன் - கைராசி 
அன்புள்ள அத்தான் - கைராசி 
கண்ணும் கண்ணும் பேசியதும் - கைராசி 
காதல் என்னும் ஆற்றினிலே - கைராசி 
அந்த சிவகாமி மகனிடம் - பட்டணத்தில் பூதம் 
உலகத்தில் சிறந்தது எது - பட்டணத்தில் பூதம் 
நாதஸ்வர ஓசையிலே - பூவும் பொட்டும் 
உன்னழகைக் கண்டு கொண்டால் - பூவும் பொட்டும் 
எண்ணம் போல கண்ணன் வந்தான் - பூவும் பொட்டும் 
முதல் என்பது தொடக்கம் - பூவும் பொட்டும் 
பத்துப் பதினாறு முத்தம் - அஞ்சல் பெட்டி 520
அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க - பொற்சிலை
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் - வரப்பிரசாதம். 

இப்போது வயது முதிர்ந்த நிலையில், பல பொருளாதார பிரச்சினைகள் இருப்பினும் தனது சுயமரியாதையை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். 2017 செப்டம்பர் 8 ஆம் தேதி சேலத்தில் அவரது இல்லத்திலேயே காலமானார். இசைக்காகவே வாழ்ந்து மறைந்த அவரை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

நன்றி - திரு வாமனன் அவர்கள்.






Saturday, August 12, 2017

A M ராஜா

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 12" - A M ராஜா 

தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும் இவரது குரலினிமை உறங்கவில்லை..தென்றலில் தவழ்ந்தும, திங்களில் ஒளிர்ந்தும் நம்மை மகிழ்வித்தது.

A M ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தவர் ராஜா. 

ரேணுகாபுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின 
படிப்பு நன்றாக வந்தது.பாட்டும்நன்றாக வந்தது. எங்கு சென்றாலும் அவனைப் பாட சொல்வார்கள் என்று ராஜாவின் தமக்கை நாகம்மா கூறுகிறார்.

பள்ளியிறுதி முடித்து இண்டர்மீடியட் படிக்க, வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.அப்போது கல்லூரி இசைப்போட்டியில் வென்ற ராஜாவின் குரலை பதிவு செய்ய விரும்பியது HMV நிறுவனம். "ஓ ஹ்ருதய ராணி" "எந்த தூரம் ஈ பயணம்" என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி மெட்டமைத்துப் பாடிய பாடல்கள் பதிவாயின

இந்த காலக்கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்எஸ் வாசன். கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக திருப்தி தராததால் "ஓ ஹ்ருதயஹ்ருதய ராணி" பாடலைக் கேட்ட அவர் A M ராஜாவை பாட வைக்க விரும்பினார். "சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம், சுக ஜீவனாதரம்" என்ற பாடல் அவர் பாடி புகழ் பெற்றது..பின்னர் அவர்அவர் இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கும் வரை பாடல்கள்தான் பாடி வந்தார்.

மகேஸ்வரி என்ற படத்தின் "அழகுநிலாவின் பவனியிலே" என்ற பாடல் பதிவின்போது ஜிக்கியிடம் அவரை விரும்புவதாகவும் அவரை மணக்க ஆசைப்படுவதாகவும் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் ராஜா. பின்னர் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு ரயில் பயணத்தின் போது கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதருடன் ராஜா பயணம் செய்ய நேர்ந்தது.. இருவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு வாய்ப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதர் படம் இயக்கினால் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

ஸ்ரீதருக்கு வாய்ப்பும் கிடைத்தது.வாக்கும் காப்பாற்றப்பட்டது.தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்தது.- படம் கல்யாணப் பரிசு.

ராஜாவின் இசையில். ராஜா. சுசீலா, ஜிக்கி ஆகியோரின் குரலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. "துள்ளாத மனமும் துள்ளும், வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் ஒருவன்" என்று அனைத்துப் பாடல்களுமே வெற்றி. "உன்னைக் கண்டு நான் ஆட" பாடல் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீப ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
'தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 11" - A M ராஜா 

தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும் இவரது குரலினிமை உறங்கவில்லை..தென்றலில் தவழ்ந்தும, திங்களில் ஒளிர்ந்தும் நம்மை மகிழ்வித்தது.

A M ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தவர் ராஜா. 

ரேணுகாபுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின 
படிப்பு நன்றாக வந்தது.பாட்டும்நன்றாக வந்தது. எங்கு சென்றாலும் அவனைப் பாட சொல்வார்கள் என்று ராஜாவின் தமக்கை நாகம்மா கூறுகிறார்.

பள்ளியிறுதி முடித்து இண்டர்மீடியட் படிக்க, வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.அப்போது கல்லூரி இசைப்போட்டியில் வென்ற ராஜாவின் குரலை பதிவு செய்ய விரும்பியது HMV நிறுவனம். "ஓ ஹ்ருதய ராணி" "எந்த தூரம் ஈ பயணம்" என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி மெட்டமைத்துப் பாடிய பாடல்கள் பதிவாயின

இந்த காலக்கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்எஸ் வாசன். கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக திருப்தி தராததால் "ஓ ஹ்ருதயஹ்ருதய ராணி" பாடலைக் கேட்ட அவர் A M ராஜாவை பாட வைக்க விரும்பினார். "சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம், சுக ஜீவனாதரம்" என்ற பாடல் அவர் பாடி புகழ் பெற்றது..பின்னர் அவர்அவர் இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கும் வரை பாடல்கள்தான் பாடி வந்தார்.

மகேஸ்வரி என்ற படத்தின் "அழகுநிலாவின் பவனியிலே" என்ற பாடல் பதிவின்போது ஜிக்கியிடம் அவரை விரும்புவதாகவும் அவரை மணக்க ஆசைப்படுவதாகவும் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் ராஜா. பின்னர் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு ரயில் பயணத்தின் போது கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதருடன் ராஜா பயணம் செய்ய நேர்ந்தது.. இருவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு வாய்ப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதர் படம் இயக்கினால் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

ஸ்ரீதருக்கு வாய்ப்பும் கிடைத்தது.வாக்கும் காப்பாற்றப்பட்டது.தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்தது.- படம் கல்யாணப் பரிசு.

ராஜாவின் இசையில். ராஜா. சுசீலா, ஜிக்கி ஆகியோரின் குரலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. "துள்ளாத மனமும் துள்ளும், வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் ஒருவன்" என்று அனைத்துப் பாடல்களுமே வெற்றி. "உன்னைக் கண்டு நான் ஆட" பாடல் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீப ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

பிறகு இவர் விடிவெள்ளி, தேன் நிலவு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். விடிவெள்ளி படத்தில் "இடை கையிரண்டில் ஆடும்" என்று சிவாஜி கனேசனுக்காக இவர் பாடிய பாடல், "கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைஅன்பை" "பண்ணோடுபண்ணோடு பிறந்தது தாளம்" "எந்நாளும் வாழ்விலே" போன்ற பாடல்கள் பிரபலமாயின. தேன் நிலவு படத்தில் "பாட்டுப் பாடவா" என்ற ஜனரஞ்சக பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. "காலையும் நீயே, மாலையும் நீயே" பாடல் பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி ஆகிய ராகங்கள் அடங்கிய ராகமாலிகையில் அமைந்து இசை விரும்பிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. மேலும் " சின்னக் சின்னக் கண்ணிலே" "ஓஹோ எந்தன் பேபி" "ஊரெங்கும் தேடினேன்" மலரே மலரே தெரியாதோதெரியாதோ" போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.

ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீதருடனான ராஜாவின் உறவு இப்படத்துடன் முறிந்தது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கவே ராஜா மறுத்து விட்டார். பிறகு எம் ஜி ஆர் போன்றோரின் தலையீட்டினால் செய்து முடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசையமைக்க வாங்கியிருந்த காசோலையையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள், ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, வீட்டு மாப்பிள்ளை, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகியவை.

A M ராஜா இசையமைத்த படங்கள்:
கல்யாணைப் பரிசு (1950) 
விடிவெள்ளி (1960)
தேன்நிலவு (1961)
ஆடிப்பெருக்கு (1962)
அன்புக்கோர் அண்ணி (1960)
வீட்டு மாப்பிள்ளை (1972)
எனக்கொரு மகன் பிறப்பான் (1975)

இசையமைக்குமுன் பிறர் இசையமைப்பில் ராஜா பாடிய சில பாடல்கள்:
சம்சாரம், சம்சாரம் (சம்சாரம்)
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் - பி சுசீலாவுடன்-பி சுசீலாவின் முதல் பாடல் இது)
பேசும் யாழே பெண் மானே - நாம் 
சின்ன சின்ன வீடு கட்டி - மருமகள் 
நான் ஏன் வர வேண்டும் ஏதுக்க்காகவோ - பூங்கோதை 
துள்ளியே ஓடுமே வாழ்வுமே - வஞ்சம் 
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே - அவன் 
அன்பே வா, அழைக்கின்றதெந்தன் மூச்சே - அவன் 
சிற்பி செதுக்காத -பொற்சிலையே எதிர்பாராது 
சிங்காரப் பைங்கிளியே பேசு - மனோகரா

இவரது இசையமைப்பில் சில வெற்றிப் பாடல்கள்:
உன்னைக் கண்டு நான் ஆட - கல்யாணப் பரிசு 
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ - கல்யாணப் பரிசு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாணப் பரிசு
காதலிலே தோல்வியுற்றான் - கல்யாணப் பரிசு
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி
இடை கையிரண்டில் - ஆடும் - விடிவெள்ளி
பண்ணோடு பிறந்தது தாளம் - விடிவெள்ளி 
பாட்டுப் -பாடவா- தேன் நிலவு 
ஓஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு 
சின்ன சின்னக் கண்ணிலே - தேன் நிலவு
காலையும் நீயே மாலையும் நீயே - தேன் நிலவு 
மலரே மலரே தெரியாதோ - தேன் நிலவு 
ஊரெங்கும் தேடினேன் -தேன் நிலவு 
கண்ணிழந்த மனிதர் முன்னே - ஆடிப்பெருக்கு 
அன்னையின் அருளே வா வா - ஆடிப்பெருக்கு 
தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு 
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ஆடிப்பெருக்கு
ராசி நல்ல ராசி - வீட்டு மாப்பிள்ளை 
மலரே நீ என் மலரல்ல - வீட்டு மாப்பிள்ளை

தனது இனிய இசையாலும், காந்தக் குரலாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட A M ராஜா,ஒரு இசைக் கச்சேரி செய்ய பயணம் செய்தபோது, ரயில் பிளாட்ஃபாரத்தின் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். எதிர்பாராத இந்த மரணம் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் அது பொய்யல்ல. மறக்க முடியாத ஒரு பண்பான மனிதர் திரு A M ராஜா.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)'

பிறகு இவர் விடிவெள்ளி, தேன் நிலவு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். விடிவெள்ளி படத்தில் "இடை கையிரண்டில் ஆடும்" என்று சிவாஜி கனேசனுக்காக இவர் பாடிய பாடல், "கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைஅன்பை" "பண்ணோடுபண்ணோடு பிறந்தது தாளம்" "எந்நாளும் வாழ்விலே" போன்ற பாடல்கள் பிரபலமாயின. தேன் நிலவு படத்தில் "பாட்டுப் பாடவா" என்ற ஜனரஞ்சக பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. "காலையும் நீயே, மாலையும் நீயே" பாடல் பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி ஆகிய ராகங்கள் அடங்கிய ராகமாலிகையில் அமைந்து இசை விரும்பிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. மேலும் " சின்னக் சின்னக் கண்ணிலே" "ஓஹோ எந்தன் பேபி" "ஊரெங்கும் தேடினேன்" மலரே மலரே தெரியாதோதெரியாதோ" போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.

ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீதருடனான ராஜாவின் உறவு இப்படத்துடன் முறிந்தது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கவே ராஜா மறுத்து விட்டார். பிறகு எம் ஜி ஆர் போன்றோரின் தலையீட்டினால் செய்து முடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசையமைக்க வாங்கியிருந்த காசோலையையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள், ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, வீட்டு மாப்பிள்ளை, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகியவை.

A M ராஜா இசையமைத்த படங்கள்:
கல்யாணைப் பரிசு (1950) 
விடிவெள்ளி (1960)
தேன்நிலவு (1961)
ஆடிப்பெருக்கு (1962)
அன்புக்கோர் அண்ணி (1960)
வீட்டு மாப்பிள்ளை (1972)
எனக்கொரு மகன் பிறப்பான் (1975)

இசையமைக்குமுன் பிறர் இசையமைப்பில் ராஜா பாடிய சில பாடல்கள்:
சம்சாரம், சம்சாரம் (சம்சாரம்)
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் - பி சுசீலாவுடன்-பி சுசீலாவின் முதல் பாடல் இது)
பேசும் யாழே பெண் மானே - நாம் 
சின்ன சின்ன வீடு கட்டி - மருமகள் 
நான் ஏன் வர வேண்டும் ஏதுக்க்காகவோ - பூங்கோதை 
துள்ளியே ஓடுமே வாழ்வுமே - வஞ்சம் 
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே - அவன் 
அன்பே வா, அழைக்கின்றதெந்தன் மூச்சே - அவன் 
சிற்பி செதுக்காத -பொற்சிலையே எதிர்பாராது 
சிங்காரப் பைங்கிளியே பேசு - மனோகரா

இவரது இசையமைப்பில் சில வெற்றிப் பாடல்கள்:
உன்னைக் கண்டு நான் ஆட - கல்யாணப் பரிசு 
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ - கல்யாணப் பரிசு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாணப் பரிசு
காதலிலே தோல்வியுற்றான் - கல்யாணப் பரிசு
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி
இடை கையிரண்டில் - ஆடும் - விடிவெள்ளி
பண்ணோடு பிறந்தது தாளம் - விடிவெள்ளி 
பாட்டுப் -பாடவா- தேன் நிலவு 
ஓஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு 
சின்ன சின்னக் கண்ணிலே - தேன் நிலவு
காலையும் நீயே மாலையும் நீயே - தேன் நிலவு 
மலரே மலரே தெரியாதோ - தேன் நிலவு 
ஊரெங்கும் தேடினேன் -தேன் நிலவு 
கண்ணிழந்த மனிதர் முன்னே - ஆடிப்பெருக்கு 
அன்னையின் அருளே வா வா - ஆடிப்பெருக்கு 
தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு 
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ஆடிப்பெருக்கு
ராசி நல்ல ராசி - வீட்டு மாப்பிள்ளை 
மலரே நீ என் மலரல்ல - வீட்டு மாப்பிள்ளை

தனது இனிய இசையாலும், காந்தக் குரலாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட A M ராஜா,ஒரு இசைக் கச்சேரி செய்ய பயணம் செய்தபோது, ரயில் பிளாட்ஃபாரத்தின் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். எதிர்பாராத இந்த மரணம் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் அது பொய்யல்ல. மறக்க முடியாத ஒரு பண்பான மனிதர் திரு A M ராஜா.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...